கவிதை : நானும் ஒரு நாய் - ச.சக்தி  kavithai : naanum oor naai - s.sakthiகவிதை : நானும் ஒரு நாய் - ச.சக்தி  kavithai : naanum oor naai - s.sakthi
நானும் ஒரு நாய் 
பக்கத்தில்
அமர்ந்தவாறு
தன் கையை
நாவால் நக்கி குழைந்துக்  கொண்டிருந்த
நாய்க்குட்டிக்கு‌ ஓர் முத்தம் கொடுக்கிறேன் ‌
பதிலுக்கு
அந்த நாய்க்குட்டியும்
எனக்கொரு முத்தம் கொடுக்கிறது தூரத்திலிருந்து
எனக்கும்
ஒரு முத்தவேன்டுமென்றவாறு
இன்னொரு
நாய்க்குட்டியொன்று
ஓடி வர
இரண்டு நாய்களோடு
சேர்ந்து நானும்
மூன்றாவது
ஓர் நாயாகத்தான்
குழைந்து குழைந்து
நின்றுகொண்டிருக்கிறேன்
எல்லாரும் சமமென்று
அவ்வப்போது உச்சரிக்கும் முதலாளியின்
வீட்டு வாசலுக்கு வெளியே ,
கவிஞர் ச. சக்தி 
பண்ருட்டி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *