பொங்கலன்று
இனாம் காசு, புதுத்துணி என்று வாங்கி வரும்
அப்பாவிடம் எப்படிக் கேட்பது
“ஏன்ப்பா அவங்க வீட்டு வாசல்ல
ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருந்தன்னு”
உன் வீட்டு
மாட்டுக்கொட்டாவைக் கேட்டுப் பார்
என் தாத்தனின் பாதச்சுவடுகளையும்
என் அப்பனின் வியர்வைத் துளிகளையும்
உன் தாத்தன், அப்பனின்
அதட்டல், மிரட்டல் மொழிகள்
தோற்றுப் போனதையும்
எப்போது ஊருக்குப் போனாலும்
உங்க பையன் மெட்ராசுலையா படிக்குறான்?
என்ன படிக்குறான்? எனக் கேட்டுவிட்டு,
‘உங்க ஆளுங்களுக்கு’ எப்படியும் வேல கெடச்சிடும்
நல்லா படிக்கச் சொல்லு,
எம் பையன் தான் படிக்காம போயிட்டான்
ம்ம்ம்… என்று கரிசனம் காட்டும்
‘அவர்களை’ என்ன பெயர் சொல்லி
உங்களிடம் அறிமுகம் செய்வது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை ஐயா இது கற்பனை ஆகா இருக்க முடியாது உண்மை ஆகாதான் இருக்க முடியும் ஐயா வாழ்த்துக்கள் 👏👏👏