பட்டாம்பூச்சியும் அவளும் கவிதை – அபர்ணாசெங்கு

பட்டாம்பூச்சியும் அவளும் கவிதை – அபர்ணாசெங்கு




பூத்துக் கிடக்கின்றன
பூ வனம் எங்கும்.
காத்துக் கிடக்கின்றன
காதல் விழிகள் எங்கும்.

படபடக்கும் பட்டாம்பூச்சிக்கு,

மது உண்ட களிப்பில்
உண்டான போதையா?
போதையான மனதுள்
மது கண்ட களிப்பா?

ரீங்காரமிடும் மனதுள்
ஊஞ்சலாடும் உல்லாசமா?
ஓங்காரமான மது சுவையில்
ரீங்காரமாய் உல்லாசமா?

வாரி இறைத்த ஜாலப் பூக்களால்

பட்டாம்பூச்சிக்கு ஜொலிப்பா?
அதன் உடல் ஜொலிப்பால்
பூவன மெங்கும் வானவில் பிரதிபலிப்பா?

தென்றல் என்னவளின் வண்ண அசைவில்
பூக் கொய்தும் பூவாவென
பட்டாம்பூச்சிக்குள் பூகம்பமா?
பட்டாம்பூச்சியின் படபடப்பில்
அவள் மன உணர்வுக்குள் பூகம்பமா?

– அபர்ணாசெங்கு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *