புத்தன் கொண்ட ஆசை...

1. மல்லாந்திருந்தான் புத்தன்
மலர்ந்திருந்தது செம்பருத்தி அருகருகே
அவன் போல அதுவும்
அது போல அவனும் .
wallpaper hands, heart, sun, sunset, love HD : Widescreen : High ...
2.ஆலங்காற்று  அள்ளியணைத்தது
அழகு நாச்சி கோயில்சுடரை
இருளல்ல இப்போது
எங்கும் கரிய காதல்.
மரங்களின் வரங்கள்!: புனிதச் ...
3. அத்துவான வெளியிடைநின்று
அந்திவெறித்த இடையனுக்குள் இதழ்விரித்தது
இடைச்சியின்
உள்ளங்கை செம்மலர்.
ஊமத்தம்பூ இதன் காய் பலருக்கு ...
4. அரவங்கள் ஆலிங்கனங்கொள்ளும்  அடர்வனத்தில்  மேய்ச்சல்முடித்து
கரையில் கிடை திருப்பிக்கொண்டிருந்தேன்
உச்சியில் பூத்திருந்த ஊமத்தம்பூவொன்று
ஊருணியிலும் பூத்திருந்தது.
தெருநாய்.. - இரா.மணிமாறன் - Medium
5. செவலை நாய்க்குட்டியை
வெண்தாடி  வருட முத்தமிடும்
பச்சைக்கம்பளி போர்த்திய
கருப்புக்கிழவனுக்கு
மஞ்சள் கண்கள்.
–ஸ்ரீதர்பாரதி
One thought on “ஸ்ரீதர் பாரதி கவிதைகள்”
  1. வாவ் சூப்பர்.நான்கு வரிகளில் அழகான கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *