1. மல்லாந்திருந்தான் புத்தன்
மலர்ந்திருந்தது செம்பருத்தி அருகருகே
அவன் போல அதுவும்
அது போல அவனும் .
2.ஆலங்காற்று அள்ளியணைத்தது
அழகு நாச்சி கோயில்சுடரை
இருளல்ல இப்போது
எங்கும் கரிய காதல்.
3. அத்துவான வெளியிடைநின்று
அந்திவெறித்த இடையனுக்குள் இதழ்விரித்தது
இடைச்சியின்
உள்ளங்கை செம்மலர்.
4. அரவங்கள் ஆலிங்கனங்கொள்ளும் அடர்வனத்தில் மேய்ச்சல்முடித்து
கரையில் கிடை திருப்பிக்கொண்டிருந்தேன்
உச்சியில் பூத்திருந்த ஊமத்தம்பூவொன்று
ஊருணியிலும் பூத்திருந்தது.
5. செவலை நாய்க்குட்டியை
வெண்தாடி வருட முத்தமிடும்
பச்சைக்கம்பளி போர்த்திய
கருப்புக்கிழவனுக்கு
மஞ்சள் கண்கள்.
–ஸ்ரீதர்பாரதி
வாவ் சூப்பர்.நான்கு வரிகளில் அழகான கவிதை.