Selfie Shortstory By Era. Kalaiyarasi. செல்பி குட்டி கதைக - இரா. கலையரசி




சும்மா இருப்பா “பேயி பிசாசு” னுகிட்டு. அதுவும் செல்போன்ல வருதாம் போவியா?

சங்கரை பேசி மறித்தான் சுரேஷ். டேய்! நான் எடுக்கிற செல்பியில பாரு! பின்னாடி ஒரு உருவம் தெரியுது.

இவனும் எடுத்தான். ஒரு மங்கிய உருவம் தெரிந்தது. வெவ்வேறு இடங்களில் எடுத்தான். அங்கும் அப்படியே தெரிந்தது.

அவன் எடுத்த அதே நொடியில் அவனை உரசி சென்ற வண்டி தலைகீழாக கவிழ்ந்தது.

“பயம் பேயை விட கொடூரமானது”. இருவரும் நடுங்கினர். மணி இரவு பனிரெண்டு. செல்போன் ஒலித்தது..

போனை எடுக்கவில்லை. மேசையில் இருந்தது. கீழே விழுந்தது. மீண்டும் அழைக்கிறது. நடுங்கிய கரங்கள் காதில் சொருக கனத்த குரல் ஒலித்தது.

சாரி! சார்.”.சாப்ட்வேர் ப்ராப்ளம். சரி செஞ்சுட்டோம். இனி செல்பியில் ப்ளர் இமேஜ் வராது”. ஏது?ப்ளர் இமேஜா?? போன உயிர் திரும்பியது சங்கருக்கு.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *