சொல்லொன்று உரசிப்பிடித்த தீயில்
வெந்து தணிந்த காடு
இன்னொரு காட்டுக்கு எருவானது
பொல்லா சொல்பட்டு சரிந்த தலைகள்
சரித்திரத்தில் துருத்தி நிற்கின்றன
செந்நா புலவனை
கிணற்றில் விழுந்து
தற்கொலை செய்த சொல்
பூத ரகசியங்களை ஆவியாக்கிபடி
உயிர்த்தெழுகிறது
பச்சை உதடுகளின் முத்த வெடிப்பில்
நிலத்தை நிமிண்டிப் பழித்தன
புதைச் சொற்கள்
தேவனைப் பிடிக்க
மனிதர்களைப் பயிற்றுவித்து
மனிதர்களுக்கு வீசுகிறது ஆதிச்சொல்
– யாழ் ராகவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.