பெ.விஜயகுமார் - தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள் | Tamil short story sculptors

பெ. விஜயகுமார் எழுதிய “தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள்” – நூலறிமுகம்

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆங்கிலத்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; புதிய ஆசிரியன் மாத இதழின் இணை ஆசிரியராக பணிபுரிபவர்; சிறுகதைகள் பற்றியும் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றியும் நிறைய ஆய்வுத் தொகுப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர் என பன்முக தளங்களில்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” –  பெ.விஜயகுமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” – பெ.விஜயகுமார்

      உலகின் மிகப் பெரிய உயிர்வேலி பற்றி ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் எழுதிய வரலாற்று ஆவணம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் அந்நாடுகளில் இழைத்த கொடுமைகள் எண்ணில் அடங்காதவை. அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை…
“ஹெர்மன் ஹஸ்ஸி”- கவிதை மொழிபெயர்ப்பு -பேரா மு விஜயகுமார்

“ஹெர்மன் ஹஸ்ஸி”- கவிதை மொழிபெயர்ப்பு -பேரா மு விஜயகுமார்




ஹெர்மன் ஹஸ்ஸி

ஜெர்மன் எழுத்தாளர்.
நோபல் பரிசு பெற்றவர்.
தலைப்பு – -die gedichte- Hesse poems 1970).

கொசுக்௯ட்டம்
*******************

மின்னுகின்ற தூசுபடலத்தில்
பேராசையுடன் ஒரு ௯ட்டம் முன்னேறுகிறது
நடுங்குகின்ற வட்டங்களாக.
ஆடம்பரமாக ஒரு பெருங்௯ட்டம் போகிறது
சிறிதுநேரத்தில் காணாமல் மறைகிறது.
அவைகள் மயக்கமும், வெறியையும் சுழற்றி அடிக்கிறது.
மகிழ்ச்சியில் குதிக்கிறது மரணத்தை எதிர்த்து
ராஐ்யம் முடிவில் அழிந்து போனது
தங்கத்தை போன்ற வலிமையான ௯ட்டம் சிதறியது.
இரவு புராணத்தில் ஒரு தடையமும் இன்றி நிகழும்
கொடூர நடனத்தை ஒருபோதும் அறிந்ததில்லை…

A SWAM OF GNATS
**********************
Many thousand glittering motes
Crowd forward greedily together
In trembling circles.
Extravagantly carousing away
For a whole hour rapidly vanishing,
They rave, delirious, a shrill whir,
Shivering with joy against death.
While kingdoms, sunk into ruin,
Whose thrones, heavy with gold, instantly scattered
Into night and legend, without leaving a trace,
Have never known so fierce a dancing.

மொழிபெயர்ப்பு -பேராசிரியர் மு விஜயகுமார்
saimgoms2017@gmail.com

………………………………………………………………………………………………..

ஹெர்மன் ஹஸ்ஸி
ஜெர்மன் எழுத்தாளர்.
நோபல் பரிசு பெற்றவர்.
தலைப்பு -die gedichte- Hesse poems 1970).

பயணம்‌‌
***********
வருத்தபடாதே இரவு மிக அருகில்
நாம் குளிர்ந்த நிலவின் இரகசிய சிரிப்பைக் காண்போம்.
மங்கலான கிராமங்களுக்கு இடையே கைகோர்த்து ஓய்வெடுப்போம்.

வருத்தப்படாதே காலம் விரைவில் கனியும்
நாம் ஓய்வு எடுப்போம் நம் சிறிய சிலுவை பிரகாசமான பாதை பக்கமாக நிற்கிறது
புயலே? பனியோ? வந்துபோ..

ON A JOURNEYJ
******************
Don’t be downcast, soon the night will come,
When we can see the cool moon laughing in secret
Over the faint countryside,
And we rest, hand in hand.

Don’t be downcast, the time will soon come
When we can have rest. Our small crosses will stand
On the bright edge of the road together,
And rain fall, and snow fall,
And the winds come and go.

மொழிபெயர்ப்பு -பேராசிரியர் மு விஜயகுமார்
saimgoms2017@gmail.com

நூல் அறிமுகம்: சோழ நாகராஜனின் பெரியார் பிராமணர்களின் எதிரியா? – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: சோழ நாகராஜனின் பெரியார் பிராமணர்களின் எதிரியா? – பெ.விஜயகுமார்




பகுத்தறிவுப் பகலவன் பெரியார் நீண்டநெடிய தன் வாழ்நாளில் தமிழகம் முழுவதும் பயணித்து தமிழர்களுக்குப் பகுத்தறிவைப் புகட்டி வந்தார் அவரைத் தூற்றுவோரும், அவர் மீது வெறுப்பை உமிழ்வோரும் உண்டு என்ற போதிலும் தமிழ் கூறும் நல்லுகிற்கு அவர் ஆற்றியுள்ள பேருதவியை தமிழர்கள் என்றென்றும் மறக்காமல் அவரின் புகழைப் போற்றிப் பாராட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதுறுதி.

தந்தை பெரியார் பற்றி தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வரிசையில் எழுத்தாளர் சோழ நாகராஜன் ‘பெரியார் பிராமணர்களின் எதிரியா?’ என்ற நூலை வெளிக் கொணர்ந்துள்ளார். தக்க சான்றுகளுடன் பெரியார் பிராமணர்களின் எதிரி அல்ல என்பதை இந்நூலில் நிரூபித்து வெற்றி கண்டுள்ளார் சோழ நாகராஜன். பேரா.அருணன் தனது அணிந்துரையில்பெரியாரை முழுவதும் புரிந்து கொள்ளவும், சனாதன இந்துத்துவ பிராமணிய எதிர்ப்பே இன்றைய தேவை என்பதை அறிந்து கொள்ளவும் இந்நூல் உதவிடும்’ என்பதைத் தெளிவுபடுத்துகிறார். பெரியார் பற்றி இதுவரை பேசப்படாத புதிய பரிமாணங்கள் கொண்ட இந்நூல் சாதிச் சேற்றில் சிக்கிக் கிடக்கும் எல்லா மனிதர்களும் அதனின்று மீண்டுவர பேருதவி செய்யும் என்று நூலின் ஆய்வுரையில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி கூறியுள்ளது முற்றிலும் சரியான கருத்தே.

சோழ நாகராஜன் செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்கவர். திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் குறித்து தொடர்ந்து தீக்கதிர், புதிய ஆசிரியன் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். ’வெறும் கோழிகளல்ல’, ரொம்ப தூரமில்ல…’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள், ’சினிமா சில மனிதர்களும், சில சர்ச்சைகளும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு, ’அவர்தான் கலைவாணர்’- வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்து குழுமம் ’மௌனம் கலைத்த சினிமா’ என்ற நூலை விரைவில் வெளியிட உள்ளது. சோழ நாகராஜன் பல்வகைத் திறமைகளைக் கொண்ட நல்ல கலைஞர், சிந்தனையாளர், எழுத்தாளர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் புகழை உலகமெல்லாம் பாடித்திரியும் ‘சிகப்புக் குயில்’.   

இந்நூல் பெரியாருக்கு முன், பெரியாரின் காலம். பெரியாரைத் துணைக்கோடல் என்று மூன்று இயல்களாக எழுதப்பட்டுள்ளது. ’பெரியாருக்கு முன்’ என்ற முதல் இயலில் இந்தியாவில் ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வர்ண பேத வரலாற்றை நூலாசிரியர்  விளக்குகிறார். பகவத் கீதையில்நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டு, அதுவே எண்ணற்ற சாதிகளாகப் பல்கிப் பெருகியும் போன விசித்திரமான சமூகமே இந்தியச் சமூகம். கடவுளால் படைக்கப்பட்டதுதான் இந்தியாவிலுள்ள சாதீயச் சமூகம். அந்தக் கடவுளுக்கே அதை மாற்றுகிற வல்லமை, அதிகாரம், உரிமை என்று எதுவுமில்லை. அதாவது சர்வ வல்லமையுள்ள கடவுளைக் காட்டிலும் அதிக வல்லமை உடையது சாதீயம்என்று சொல்லப்பட்டுள்ளதை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.   

சாதியத்தின் வித்து ஊன்றப்பட்ட காலந்தொட்டே அதை எதிர்த்த கலகக் குரல்களும் இந்திய மண்ணில் ஒலிக்கத் துவங்கின. பௌத்தம், சமணம், ஆசீவகம் போன்ற மதங்கள் சாதி வேற்றுமைகளைக் களைந்தெறிந்திடவே விரும்பின. வர்ணாசிரமத்திற்கு எதிராக ஆதியிலேயே களம் கண்டவர் புத்தர். மனுஸ்மிருதி அவரை எதிர்த்து சாதியத்தை நிலைநாட்டவே இயற்றப்பட்டதாக அம்பேத்கர் கூறுவார். சார்வாகர், கபிலர், வர்த்தமான மகாவீரர், வள்ளலார், நாராயண குரு போன்றோர் எல்லாம் வைதீகத்திற்கெதிரான சமரின் தளபதிகளே. தமிழ் மரபு சித்தர்களும் சாதி, மத மாச்சரியங்களைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கிய வள்ளுவன் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் ஓங்கி ஒலித்த பாரதி வரையிலான பிராமணிய எதிர்ப்புக் குரல்களின் நீண்ட வரலாறு தமிழ் நிலத்திற்கு இருப்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.   

கிரேக்க சமுதாயம் சூழ்நிலையைப் பொறுத்து மாறிக் கொண்டே வந்ததையும், அதனால் வளர்ச்சி பெற்றதையும், அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ளாது பிடிவாதம் பிடித்த காரணத்தால் வளர்ச்சியில் பெரிய தேக்கத்தை இந்திய சமுதாயம் அனுபவிக்க நேர்ந்த சோகத்தையும் தன்னுடைய ’இந்து தத்துவ இயல்எனும் நூலில் இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளரான ராகுல சாங்கிருத்தியாயன் சுட்டிக் காட்டியுள்ளார். அதனை  அவர் ”இந்தியாவைப் பீடித்திருந்த இளம்பிள்ளை வாதம், வளர்ச்சித் தேக்கம், உயிருள்ள சவம், முட்டாள்தனங்களின் காட்சி சாலைஎன்றெல்லாம் சாடுகிறார். வளர்ச்சி அடிப்படையில் கிரேக்க சமுதாயத்திற்கும், சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்த இந்திய சமுதாயத்திற்கும் இடையில் நிலவிடும் வேறுபாட்டை சாங்கிருத்தியாயனின் நூல்வழி சோழ நாகராஜன் நிரூபிக்கிறார்.

பெரியாரின் காலம்எனும் இரண்டாம் இயலில் பெரியார் எதிர்த்தது பிராமணியத்தையே பிராமணர்களை அல்ல என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார். காந்தி கொலையுண்ட போது திருவாரூர் அருகில் நன்னிலத்தில் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் பேசிய இளைஞர் ஒருவர் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணன் என்பதற்காக  பிராமணர்கள் அனைவரையும் விமர்சிக்கத் தொடங்கினார். உடனே மேடையில் அமர்ந்திருந்த பெரியார் அவரைத் தடுத்து நிறுத்திஇந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது. நமக்கு பார்ப்பனியத்தோடுதான் முரண். தனிப்பட்ட பார்ப்பனர்களோடல்ல. தவிரவும், நாடு இப்போது இருக்கிற நிலையில் இப்படிப் பேசுவது சரியா? கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்தாதா? என்று கோபத்துடன் கடிந்து கொண்டார். உண்மையில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஒரு சித்பவன பிராமணன்தான் என்றாலும், அவ்வாறு பிரச்சாரம் செய்ய பெரியார் விரும்பவில்லை என்பது சமூக ஒற்றுமைக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத்  தெளிவாக்கிக் காட்டுகிறது.  

சனாதனத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருந்த பிராமணர்கள் தங்களுடைய பரமவைரியாகவே பெரியாரைக் கண்டனர். பெரியாரின் சிந்தனைகள் தங்களது அடித்தளத்தையே தகர்ப்பதாக அவர்கள் கருதினர். பெரியாரை பிராமண துவேஷி என்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் பற்றி நின்ற பிராமணியக் கொள்கைகள் காரணமாக கருத்தியல் ரீதியாக மட்டுமே சனாதன பிராமணர்களை பெரியார் எதிர்த்தார். தனிப்பட்ட முறையில் பிராமணர்களோடு அவர் வேற்றுமை பாராட்டியதே இல்லை என்று நூலாசிரியர் அறுதியிட்டுக் கூறுகிறார். பிராமணியத்தை எதிர்த்துக் கடும் சமர் புரிந்த பெரியார் பிராமணர்களுக்குள்ளும் மனிதர்களைத் தேடியதை சான்றுகளுடன் நிரூபிக்கிறார். தன்னுடன் நெருங்கிப் பழகிய இராஜாஜி, எஸ்.எஸ்.வாசன், கல்கி, சுத்தானந்த பாரதி ஆகியோருடன் மட்டுமல்ல முன்பின் தெரியாத தன் கொள்கையை உரசிப் பார்த்த பிராமணர்களிடமும்கூட கண்ணியத்துடனும், வாஞ்சையுடனும் அவர் நடந்து கொண்டுள்ளதை ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார்

அதனாலேயே அக்கிரகாரத்து அதிசய மனிதர் .ராஇயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப்போல நாயக்கர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரியும் வகைமையைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியாதுஎன்று பெரியாரைப் பற்றி 1933ஆம் ஆண்டு ’காந்திஇதழில் எழுதினார். எழுத்தாளர் கல்கி 1931ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் பெரியாரைப் பற்றி  ”ஈரோடு ஸ்ரீமான் .வெ.ராமசாமி நாயக்கர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும். கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்என்று பாராட்டி எழுதியிருந்தார்

ஒரு முறை சிருங்கேரி மடாதிபதி சங்கராச்சாரியார் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதினார். (நாம் எழுதுவது கடிதம்; ஆனால் ஒரு மடாதிபதி எழுதினால் அது ஸ்ரீமுகம்) கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் பெரியாரைச் சந்தித்து உரையாடத் தமக்கு விருப்பமென சங்கராச்சாரியார் தெரிவித்திருந்தார். பிராமணீய வர்ணாசிரமத்தின் பெருமைகளைப் பேசி சங்கராச்சாரியார் எழுதியிருந்த கடிதத்திற்கு பெரியார் பதில் எழுதிய கடிதம் இதோ: ”பொறுப்புள்ள ஒரு பதவி வகிப்பவரும், பல மக்களால் வணங்கிக் கொண்டாடி மதிக்கத் தக்கவராக இருப்பவருமான சங்கராச்சாரியாரின் அழைப்பை மதித்து, அதற்கு இணங்கி, சென்று வர வேண்டியது மிகவும் நியாயமாகும் என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாம் என்றே கருதியிருக்கிறோம்என்று மிகுந்த அடக்கத்துடனேயே பெரியார் கடிதம் எழுதினார். நண்பர்கள் பலரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரைச் சந்திப்பது வீண் வேலை என்ற கருத்தைத் தெரிவித்ததால் பெரியார் அந்தச் சந்திப்பைத் தவிர்த்தார்

பெரியாரைத் துணைக்கோடல்எனும் மூன்றாம் இயலில் ஜனநாயகத்தை உள்வாங்கிக்கொண்டு பெரியார் தனது விடாப்பிடியான போராட்டத்தை எவ்வாறு நடத்தியுள்ளார் என்பதை சோழ நாகராஜன் சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறார். ’பெரியாரைத் துணைக்கோடல்எனும் சொற்றொடர் திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியது. பெரியவர்களைத் துணைக்கோடல் நல்வழிக்கு இட்டுச்செல்லும் என்று பொருள்படும். தந்தை பெரியாரைத் துணைக்கோடலும் நல்வழிக்கு இட்டுச் செல்லும், பகுத்தறிவு புகட்டிடும் என்பதில் ஐயமில்லையே. பெரியார் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி என்பதற்கு அவரின் என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.” என்ற பிரகடனமே சான்று: ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மையான கருத்துப் பரிமாறல், கருத்து முரண்படல், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளல் என்ற முறைகளின் வாயிலாகவே பெரியார் பரப்புரை செய்துள்ளார்.   

தமிழகத்தில் பெரியாரின் அப்பழுக்கற்ற இயக்கத்தால் பழமைச் சிந்தனைகளிலிருந்து பிராமணர்கள் உள்ளிட்ட அனைவருமே விடுபட்டுள்ளனர். தம் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளத்தைப் போட்டுக் கொள்வதை அநாகரீகமெனத் தமிழ் மண்ணில் அனைத்துச் சாதியினரும் கருதுவதே அதற்கான சான்றாகும். தை பிராமண சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று பிராமணர்கள்கூட ஐயங்கார் என்றோ ஐயர் என்றோ போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதவில்லையே. இதற்குக் காரணம் பெரியார் இல்லையா? இளம் வயதிலேயே கணவனை இழந்தாலும் விதவை என மொட்டையடித்து, இளங்காவி நிறச் சேலையை உடுத்தி யார் கண்ணிலும் பட்டுவிடாமல் அமங்கலியாக பெண்களை மூலையில் உட்கார வைத்த அந்த அக்கிரகாரத்துக் காட்சி இன்று வழக்கொழிந்து போனதற்கு யார் காரணம்? பெரியார்தானே என்று பிராமணர்களுக்கு உரைக்கும் வண்ணம் சோழ நாகராஜன் கேள்வி எழுப்புகிறார்.

விதவைக் கோலம் மட்டுமா ஒழிந்திருக்கிறது? கல்வி உரிமை, காதலிக்க உரிமை, மணவிலக்கு உரிமை, மறுமண உரிமை என்று தமிழகத்தில் பிராமண சாதிப் பெண்கள் பெற்றிருக்கும் இந்த உரிமைகளைப் பற்றியெல்லாம் வடமாநில பிராமணப் பெண்கள் கேள்விப்பட்டிருப்பார்களா? ’பிராமணாள் ஹோட்டல்என்று போட்டுக் கொள்வது பெருமையாகவும் தரத்தின் அடையாளமாகவும் ஒரு காலத்தில் இருந்தது. இன்றில்லையே! பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று உணவகங்களில் தனி ஏற்பாடு இருந்த நிலைமை மாறியுள்ளதே. இதற்கெல்லாம் பெரியாரின் அறிவார்ந்த களப்பணிதானே காரணம்.  

நவீன உலகின் சுதந்திரக் காற்றை அச்சமின்றி சுவாசித்துப் பயனடைந்தோரின் பட்டியலில் நிச்சயமாகத் தமிழகத்தின் பிராமண சமூகமும் உண்டு. உண்மையில் பெரியார் அன்றைக்கு வைத்த கோரிக்கை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம் பிராமணருக்கும் மூன்று அல்லது நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதாக இருந்தது. தார்மீக அடிப்படையில் சட்டத்தின் வழி நிறுவப்பட்டுள்ள இன்றைய இடஒதுக்கீட்டு கொள்கையை உளப்பூர்வமாக ஏற்று ஆதரிக்காமல் எதிர்நிலை எடுப்பது பிராமண சமூகத்தை மேலும் தனிமைப்படுத்தவே செய்யும் என்கிறார் நூலாசிரியர்.

ஆகப் பெரும்பான்மை மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்த போதிலும் பெரியாரிடத்தில் பிரியமுள்ளவர்களாகவே அவர்கள் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. வர்ணாசிரமம் புத்துயிர் பெற்று இந்துத்துவா முழக்கத்துடன் தனது தாக்குதலைத் தொடுத்து வருகிற இத்தருணத்தில் பெரியாரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் எல்லா மக்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கான போர்வாள்கேடயம் என்றுணர வேண்டும். 1948ல்விடுதலைஇதழில் அவர் எழுதிய கட்டுரையில் பெரியார்பார்ப்பானும் வேண்டாம், பறையனும் வேண்டாம். பிராமணனும் வேண்டாம், சூத்திரனும் வேண்டாம். பார்ப்பானும் இல்லை, பறையனும் இல்லை என்றான பிறகு யார் இங்கே இருப்பார்கள்? மனிதர்கள் மட்டும்தான்! சாதி மத பேதமற்ற மனிதர்கள்தான் இருப்பார்கள்” என்று தன்னுடைய உள்ளக்கிடக்கையைத் தெரிவிக்கிறார். சாதி ஏற்றத்தாழ்வற்று எல்லோரும் ஒன்றாகி மனிதர்களாக வாழ வேண்டும் எனும் போற்றுதலுக்குரிய நோக்கத்தின் மறுபெயரே பெரியார் என்று தன்னுடைய தர்க்கத்தை முடிக்கிறார் சோழ நாகராஜன்

நூலின் முடிவில் தன்னுடைய முகநூல் பதிவு ஒன்றையும் இணைத்துள்ளார். பெரியாரை நேரில் பார்த்த, அவரைத் தொட்டுணர்ந்த, அவரது பேச்சால் ஈர்ப்புப் பெற்ற தன் இளமைக் கால அனுபவத்தை வாசகர்களிடையே பகிர்ந்து கொள்கிறார். ”பின்னாளில் நான் கற்ற மார்க்சீய மெய்ஞானம் என் சிந்தனையை மேலும் கூர்மைப்படுத்தியது. துவக்கப் புள்ளியாய் நெஞ்சில் குடிகொண்ட பெரியாரியம் அசைக்க முடியாத அடிக்கல்லாகியது. அடியுரமாகியது என்று கூறி சிலாகிக்கிறார். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நூலினை பாங்குடன் வெளியிட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.

– பேரா.பெ.விஜயகுமார் 

Vasippirku Thisai illai and Punaivilakkiya Nathiyil Neendhi Bookreview By S. Vincent நூல்கள் அறிமுகம்: வாசிப்பிற்கு திசை இல்லை மற்றும் புனைவிலக்கிய நதியில் நீந்தி - ச. வின்சென்ட்

நூல்கள் அறிமுகம்: பெ. விஜயகுமாரின் வாசிப்பிற்கு திசை இல்லை மற்றும் புனைவிலக்கிய நதியில் நீந்தி – ச. வின்சென்ட்

அறிமுகங்களுக்கு ஓர் அறிமுகம்
பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய வாசிப்பிற்குத் திசை இல்லை, புனைவிலக்கிய நதியில் நீந்தி.. என்ற இரண்டு நூல்களும் பல இலக்கியப் பனுவல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெறுவதால்  பல திசைகளிலிருந்தும் இலக்கியக் காற்று இங்கு வீசி கதவுகளைத் திறந்து விடுகின்றது. இப்படிப்பட்ட அறிமுகங்களை  மூன்று முறைகளில் செய்யலாம்: அவற்ற்றின் சுருக்கத்தை மட்டும் சொல்வது ஒரு வகை; சுருக்கத்தோடு விமர்சனத்தையும் சேர்ப்பது இன்னொன்று; நூலாசிரியரையும் அவருடைய சூழலையும் பற்றிக்கூறி நூலின் சுருக்கத்தைக் கூறுவது முன்றாவது வகை. பேராசிரியர் பெரும்பாலும் இந்த மூன்றாவது முறையைப் பின்பற்றுகிறார்.

இந்த இரண்டு புத்தகங்களும் நூல்களை அல்லது சிறுகதைகளைப் பற்றிக்கூறுவதால் இவற்றை ஒரு நூலின் இரண்டு தொகுதிகளாகக் கருதலாம். ஒவ்வொன்றிலும் பதினாறு கட்டுரைகள். அவற்றில் 22 நாவல்கள், 4 நாடகங்கள், இரண்டு சிறுகதைகள், 4 கட்டுரைத் தொகுதிகள் அடங்கும். படைப்பாளிகளில் பெரும்பாலும் வெளிநாட்டினரும் வேறு இந்திய எழுத்தாளர்களும் இருந்தாலும் தமிழ்ப் படைப்பாளிகளும் இடம் பெறுகிறார்கள்.

நாவல்களைப் பொறுத்தவரையில் தாமஸ் ஹார்டியின் ஜூட் தெ அப்ஸ்கியூரிலிருந்து தொடங்குகிறார் ஆசிரியர். நாவல் என்றால் ஹார்டி இல்லாமலா? வாசகர்கள் பலர் கல்லூரியில் படித்திருப்பார்கள்; இப்போது மறந்திருப்பார்கள். (எனெக்கென்னவோ தெ ரெட்டர்ன் ஆஃப் தெ நேட்டிவ்தான் பிடிக்கும் என்பது வேறு விஷயம்) .இன்றைய தலைமுறையினருக்கு ஹார்டியைத் தெரிந்திருக்காது. எனவே இந்த அறுமுகம் தமிழ்வாசகரை அவரை நோக்கிச் செல்லத்தூண்டும். பல நாவல் அறிமுகங்களுக்கும் இதைப் பொதுவான குறிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

காம்யூவும்  ஆலிஸ் வாக்கரும், தாஸ்தாயெவ்ய்ஸ்கியும், ரிச்சர்ட் ரைட்டும் என்று உலகின் பல முக்கிய நாவலாசிரியர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். இந்திய/ தமிழ் நாவலாசிரியர்களில் பலர் என்னைபோன்ற சாதாரண வாசகனுக்குப் புதியவர்களாக இருக்கலாம். மகாசுவேதா தேவி பற்றி எல்லோரும் இப்போது பேசுகிறோம். ஆனால் அவருடைய பெருமையை உலகிற்குச் சொல்ல ஒரு  காயத்திரி ஸ்பிவாக் தேவைப்படுகிறார். பங்கிம் சந்தரையும் தாகூரையும் விட்டு விட்டு மகாசுவேதா தேவியைத் தான் ஏன் முதன்மைப்படுத்துகிறார் என்று அண்மையில் விளக்கியிருக்கிறார் ஸ்பிவாக்.

இப்போது பேராசிரியர் விஜியகுமாரின் இரண்டு அறிமுகக் கட்டுரைகள் தமிழ் வாசகருக்குத் தேவியைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு. தனது சிறந்த  மொழிபெயர்ப்புகளுக்காக அறியப்படுகின்ற எம். ஏ. சுசிலா நாவல்களும் எழுதியிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருடைய இரண்டு நாவல்கள் மதிப்புரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. சல்மாவின் மனாமியங்கள் நாவல் பற்றிய குறிப்பு மிகுந்த பயனுள்ளது. அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் நாவல்களையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது.

சிறுகதைகள் என்றால் கோகோலும் செக்காவும்தான் நம் கண்முன் நிற்பார்கள். பேராசிரியர் அவர்களுடைய சிறுகதைகளின் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு அவர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

நாடகத்திற்கு ஓர் இப்சன். அதுவும் பொம்மை வீடு இல்லாமல் இப்சனா? ஆசிரியர் அதைப் பெண்ணியப் பார்வையில் அணுகியிருப்பது சிறப்பு. சரி. தாகூரை நாம் அவருடைய நாவல்களுக்காக, சிறுகதைகளுக்காக, கவிதை நடையில் கிடைக்கும் வாழ்க்கைத் தத்துவத்திற்காகக் கொண்டாடுகிறோம். ஆனால் விஜயகுமார் ஏன் நாடகத்தைத் தேர்ந்தெடுத்தார்? தமிழ் வாசகருக்கு தாகூர் ஒரு நாடக ஆசிரியரும்கூட என்பதைக் காட்டுவதற்காக இருக்கலாம். தமிழ் நாடகங்களும் நமக்கு அரிமுகமாகின்றன. மு. இராமசாமியின் விடாது கருப்பு முதலான ஐந்து நாடகங்கள் எவ்வாறு பெரியாரின் புரட்சிக் கருத்துக்களைத் தாங்கிவருகின்றன என்பதை ஆசிரியர் ஒருகட்டுரையில் விளக்குகிறார்.

புனைவிலக்கியத்தில் நீந்தும் பேராசிரியருக்கு வழியில் கட்டுரைத் திட்டுகளும் தட்டுப்படுகின்றன. அவற்றில் இரண்டு கல்வி பற்றியவை. ஒரு பேராசிரியராக, தனது ஆங்கில இலக்கியம் உண்டு வகுப்பறை உண்டு என்றில்லாமல் ஒரு சமுதாய அக்கறை கொண்ட சிந்தனையாளரளாகவும், கல்விபற்றிய செயல்பாடுகளில் தீவிரம் காட்டும் போராளியாகவும் விஜயகுமார் இருப்பது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும். எனவே இங்கே இரண்டு அறிமுகங்கள் கல்வி பற்றி இருப்பது குறைவுதான். எனினும் ஐத்மாதவின் நாவலைப்பற்றிய அறிமுகத்தில் பாலோ ஃப்ரெயர், ஜான் டியுயி, ஹோல்ட், ச. மாடசாமி முதலான பல  கல்வியாளர்களைப் பற்றிக் கூறி விடுகிறார். தேசிய கல்விக் கொள்கை பற்றிய நூல் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தொன்றுகிறது. இன்னொரு கட்டுரை டோட்டா-சான் பற்றியது. கல்வியில் குழந்தைகள் இயற்கையாக வளர வேண்டும் என்று வலியுறுத்தும் நூல்.

பேராசிரியர் விஜயகுமார் ஒவ்வொரு அறிமுகக் கட்டுரைக்கும் தந்திருக்கும் தலைப்பே வித்தியாசமானது. அக்கட்டுரையின் சாரம் தலைப்பிலேயே கொடுக்கப்பட்டு விடுகிறது. அவர் கதை சொல்லும் விதம் மிக எளிமை. எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடிய நடை. அவருடைய கல்வி ஆறிவை எங்கும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பது கூடுதல் சிறப்பு. இது போன்ற நூல்களை, படைப்பாளிகளின் அறிமுகங்களை அவர் நிறையத் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

ச. வின்சென்ட்

நூல்: வாசிப்பிற்கு திசை இல்லை
ஆசிரியர்: பேரா. பெ. விஜயகுமார்
விலை: ரூ 150

நூல்: புனைவிலக்கிய நதியில் நீந்தி…
விலை: ரூ 170
இரண்டு நூல்களும் கருத்து -பட்டறை வெளியீடு

நூல் அறிமுகம்: ’தேசிய கல்விக் கொள்கை – பின்னணி மர்மங்கள்’ –வரைவறிக்கை தயாரிப்பில் இருந்த   ஆர்எஸ்எஸ் பின்னணியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நூல்! – பெ.விஜயகுமார் 

நூல் அறிமுகம்: ’தேசிய கல்விக் கொள்கை – பின்னணி மர்மங்கள்’ –வரைவறிக்கை தயாரிப்பில் இருந்த   ஆர்எஸ்எஸ் பின்னணியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நூல்! – பெ.விஜயகுமார் 

இந்தியக் கல்விக் கொள்கையை வடிவமைப்பது என்ற பெயரில் இந்தியக் கல்வியைக் காவிமயமாக்குவது என்று திட்டமிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் சதியை பேராசிரியர் முனைவர் தா.சந்திரகுரு அம்பலப்படுத்தியுள்ளார். ’தேசிய கல்விக் கொள்கை- பின்னணி மர்மங்கள்’ என்ற இந்நூலினை எழுதிட அவர் எடுத்துக்கொண்ட…
நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்

இந்தியாவின் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடி வரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைப் சித்தரிக்கிறது பாண்டியக் கண்ணனின் ‘நுகத்தடி’ நாவல். ஆர்.பி.கண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட பாண்டியக் கண்ணன் மதுரை மாவட்டம் கட்ராம்பட்டி கிராமத்தில் பிறந்து தற்போது விருதுநகரில்…
நூல் அறிமுகம்: ‘மணல்’- மணற்கொள்ளையர்களின் சூறையாடலில் காணாமல் போகும் வைப்பாறின் சோகத்தைச் சொல்லிடும் நாவல்! – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: ‘மணல்’- மணற்கொள்ளையர்களின் சூறையாடலில் காணாமல் போகும் வைப்பாறின் சோகத்தைச் சொல்லிடும் நாவல்! – பெ.விஜயகுமார்

அரசியல், பொருளாதார, சமூக வெளிகளில் சூழலியல் குறித்த விழிப்புணர்வு வியாபித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகும். நவீன மார்க்சீயமும் சூழலியல் குறித்து ஆழமான விவாதங்களை முன்னெடுப்பது சமூகத்தின் மீதான அதன் உண்மையான அக்கறையின் வெளிப்பாடன்றி வேறென்ன? முதலாளித்துவம் அதன் தொடக்க காலத்திலிருந்தே, பொருளாதார வளர்ச்சி…
நூல் அறிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.! – பெ.விஜயகுமார்.

நூல் அறிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.! – பெ.விஜயகுமார்.

  மகாசுவேதா தேவி மேற்கு வங்கத்தின் சிறந்த எழுத்தாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். ஞான பீடம், சாகித்திய அகாதமி, ரமோன் மெக்சாசெ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றவர். ஜான்சிர் ராணி என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும், ஆரண்யெர் அதிகார், ஹஜர் சவுராசி…