எங்கள்
கண்கள் கூடத் தொட்டதில்லை;
கற்பகிரகத்தின் கதவுகளை!
நாங்கள்
எல்லாமும் சிந்திய
உழைப்பால் உருவான
கற்பக்கிரகத்தில்……
கடவுள்!
அபிஷேகங்களாலும்
அர்ச்சனைப் பூக்களாலும்
ஆனந்தப் படுகிறார்
ஆண்டவர்!
அபிஷேகப் பொருளும்
அர்ச்சனைப் பூக்களும்
நாங்கள் சிந்திய
வியர்வையிலும்
குருதியிலும் வந்தவை!
கற்பக்கிரகமும்
அய்யர் வீடும்
மணக்கிறது நாளும்
தீண்டும் தீட்டு….
கண்களுக்குத் தெரியாமல்!
– பாங்கைத் தமிழன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.