Chikku Bukku Childrens Story by Era Kalaiyarasi. சிக்கு புக்கு குழந்தைகள் கதை - இரா.கலையரசி




சிக்கு.புக்கு.,சிக்கு புக்கு, கூ…கூ…

கூவிக் கொண்டை சட்டையை பிடித்துக் கொண்டு ஒருவர் பின்னாடி ஒருவர் ரயில் வண்டியில் ஏறினர்.

ஏய்..ஏய்..ஏறு! ஏறு!.னு மத்த புள்ளைங்களையும் ஏத்திகிட்டாங்க.

தெரு முனையில ஏறிய ரயில் வண்டி,போய்கிட்டே இருந்துச்சு.அவங்க ஊரு களத்து மேட்டுல செத்த நேரம் நின்னுச்சு.

ம்.ம்..வண்டி ரெண்டு நிமிசந்தான் நிக்கும்.எல்லாம் தண்ணீர் பிடிச்சுகுங்க.குளத்துல இருந்த தண்ணிய புட்டியில
ஊத்திகிட்டாங்க.

ஆடி.,ஓடி தவிச்சு ரயில் வண்டி வீட்டுக்கு வந்து சேர்ந்துடுச்சு.

ரெண்டே மாசத்துல அவங்க ஊருக்கு நிஜ ரயிலும் வந்திருச்சு.இப்ப யாரும் ரயில் விளையாட்டு விளையாடறது இல்ல.

இல்லாத போது இருந்த மகிழ்ச்சி, இப்ப அந்த ரயில் வண்டியில நிசமா போகும் போது அந்தப் புள்ளைங்களுக்கு என்னமோ கிடைக்கல.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *