Porgalin Thalaimurai Poem By Karthigaiselvan செ.கார்த்திகைசெல்வனின் போர்களின் தலைமுறை கவிதை




யுத்தமும் இரத்தமும்
பின்னிப் பிணையும்போது
முத்தமும் சத்தமும்
அந்தப்புரத்தில்
விலகியிருப்பதில்லை

முத்தமும் சத்தமும்
பின்னிப் பிணையும்போது
யுத்தமும் இரத்தமும்
போர்க்களத்தில்
விலகியிருப்பதில்லை

அந்தப்புரத்தின் வெற்றி
அடுத்த தலைமுறையை
ஈன்றெடுக்கலாம்;
போர்க்களத்தின் தோல்வி
தலைமுறையே இல்லாமல்
போகச்செய்யலாம்

ஊழலும் கையூட்டும்
பின்னிப் பிணையும்போது
திருடனும் கொள்ளையும்
தேர்தல்களத்தில்
விலகியிருப்பதில்லை

திருடனும் கொள்ளையும்
பின்னிப் பிணையும்போது
ஊழலும் கையூட்டும்
ஜனநாயகத்தில்
விலகியிருப்பதில்லை

அறிக்கைகளின் வெற்றி
இந்தத் தலைமுறையை
முட்டாளாக்கலாம்;
ஜனநாயகத்தின் தோல்வி
அடுத்த தலைமுறையையும்
முட்டாளாக்கலாம்

முடியாட்சியில் மன்னனின்
படைபலம் வெற்றியைத்
தீர்மானித்தால் யுத்தக்களம்
இரத்தக்கறையாகும்!

குடியாட்சியில் கட்சியின்
பணபலம் வெற்றியைத்
தீர்மானித்தால் மக்கள்களம்
மாக்களுக்கு இரையாகும்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *