Black and White Crow or Pied Crow Based Article Written By Yercaud Elango

கட்டுரை: கருப்பு-வெள்ளைக் காகம் (பைட் காகம் – Pied Crow) – ஏற்காடு இளங்கோ

கருப்பு-வெள்ளைக் காகம் (பைட் காகம் - Pied Crow) - ஏற்காடு இளங்கோ நாம் தினமும் சாம்பற்கழுத்துக் காகத்தைக் காண்கிறோம். இது நமது வீட்டடின் அருகில் அடிக்கடி வருவதால் இதை வீட்டுக் காகம் (House Crow) என்றும் அழைக்கப்படுகிறது. வனப் பகுதியை…
மழலைக் கதைப் பாடல் - கே.என்.சுவாமிநாதன் mazhalaikathaipaattu-k.n.swaminaathan

மழலைக் கதைப் பாடல் – கே.என்.சுவாமிநாதன்

புத்திசாலிக் காக்கா... தண்ணீர் தேடிக் காக்கா ஒன்று அங்கும் இங்கும் அலைந்தது கோடைக் காலம் ஆனாதலே தண்ணீர் எங்கும் கிடைக்கலை தாகத்தோடு அந்தக் காக்கா குடிசைப் பக்கம் வந்தது குடிசையிலே காக்கா தண்ணீர் பானை ஒன்றைப் பார்த்தது ஆவலோடு நீர் குடிக்கப்…
Muyarchiyin Muthal Karu Muyalamai Shortstory By Karkavi. முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை - கார்கவி

முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி

அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது…..

பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று, ஆங்காங்கே அமர்ந்து இறைகளை தின்று கக்கி எசறிவிட்டு சென்றது….

கார்காலம் முடிந்து பனிக்காலம் வந்தது, வெயில் காலம் பல் இழித்து பச்சை உயிர்களுக்கு உயிர் கொடுத்தது……

அயராது காற்றில் ஓங்கி பறந்த செத்தைகள் மறந்தை தாண்டி, மறப்பொந்தையும் அடைந்தன…

அளவான வெயில் விழும் தருணம், பதமான மழைநீரின் தேங்கல்,.. காற்று நுழைந்து வெளிவர ஏற்ற தகவமைப்பு,….

அன்று சுத்திய காகமோ, பருந்தோ அள்ளி எசறி தின்று மென்று துப்பி விட்டு போன எத்தனையோ எச்சத்தில் ஒன்று இன்று துளிர்த்து…..

அந்த ஐம்பதடி வளைநெழி பனையில் அயராது அழகால் கொத்தி எதர்ச்சையாக விட்டு சென்ற மரங்கொத்தியின் பல நாள் உழைப்பு துளையில்…

இன்று பல இயற்கை மாற்றத்தில் மரத்தினுள் உள்ளே ஓர் விதை துளிர்விட்டது….

இதுவே *இயற்கை எனும் முயற்சியின் முதல் கரு* ஆனது….

மனிதனின் மனம் அப்படித்தான்…

எங்கோ பணியாற்றி இரத்தத்தை சிந்தி பலன் கிடைக்கும். சமயத்தில் சந்தர்ப்ப சூழலால் அதை விட்டு விலகி வர வேண்டிய நிலை உருவாகிறது…

இருப்பினும் மனிதன் அதனை மனதில் கொள்ளாது முயற்சியை கையில் கொண்டால்…

மென்மேலும் எந்த இடர் வந்தாலும் பயம் இன்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்…

வாழ்வில்… அடுத்த நிலைக்கு செல்லாத காரணம்…

முயற்சியின் முதல் கரு முயலாமை….

முயற்சி நல் வினை ஆக்கும்…..

Kuyil Muttai Poem By V Kamaraj குயில் முட்டை கவிதை - வ. காமராஜ்

குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்




நிறத்தால்
குயிலும் காக்கையும்
ஒன்றுதான்!

குரலால்
ஒன்றுபடுவதில்லை!

குயிலின் குரல்
இனிமையென்கிறோம்;
காக்கையின் குரலைக்
கரைச்சல் என்கிறோம்;
அதனதன்
மொழி அறிந்ததைப்போல!

இரண்டும்
பறவைதான்!
காகம்
மிகவும் நெருக்கமான பறவை….
மனிதருக்கு!

நம் வீட்டு மரங்களில்
கூடு கட்டுவதும்
விருந்தினர் வருகையை
அறிவிப்பதும்;
மறைந்துவிட்ட
முன்னோர்கள் காகமாகக்
கற்பனைக் கொள்வதும்….
கைகளில்
உணவு வைத்துப்
பழகி அழைத்தால்
பாசமுடன் வருவதும்!

காகத்தைப்போல
எளிமையாக
எல்லோராலும்
அதன் குரல் எழுப்புவதும்….
தன்னையழைக்கும்
அழைப்பை உணர்ந்து
பறந்து வந்து
பாசம் காட்டுவதும்….
காலையில் கரைந்து எழுப்புவதும்;
காகம் தவிர
வேறெந்தப் பறவை?

குயிலை
கூப்பிட்டுப் பாருங்கள்
முதலில்….
அதன் குரலில்!
குரலும் வராது….
குயிலும் வராது!

காகம்
அப்படியென்ன
கெடுதல் செய்தது?
குயில் கொட்டிக் கொடுத்துவிட்டது?

முள்ளோ…. சுள்ளியோ…
காக்கை
தனக்கான மாளிகையை
தானே கட்டிக்கொள்ளும்!
அதற்குத் தெரிந்த வழியில்.

காக்கையின் கூட்டில்
குயில் முட்டையிடுவதால்
பிடிக்கிறது….

அப்படியான
மனநிலை உலகம்!
குயிலை
கொண்டாடலாம்…

காகத்தை வெறுக்காதீர்கள்.
காகமும் பறவைதான்…
குயிலும் பறவைதான்!
பறவைகளை
பறவைகளாகப் பார்க்கப்
பழகிக் கொள்ளுங்கள்…

Crowed of Crows Mini Story By Manavai Karnigan. *கூட்டம்* குறுங்கதை - மணவை கார்னிகன். Book Day And Bharathi Puthakalayam

*கூட்டம்* குறுங்கதை – மணவை கார்னிகன்



இரவின் முடிவிற்கும் பகலின் துவக்கத்திற்குமான வேளை. புகை மண்டலம் சூழ்ந்ததுபோல் வானம். பறவைகளின் சப்தம். சூரியனுக்கு மட்டும் தாமதமாக கேட்கிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு மட்டும் முன்கூட்டியே கேட்டிருக்கிறது. எல்லா வண்டி கடைகளிலும் காலை உணவுக்கான வேலை நடக்கிறது. முனியப்பனும் பலகாரம் போட்டுவதற்கு தயாராகிறார்.

“க்கா க்கா க்கா”
காக்கைகளின் கூக்குரல் ஒலிக்கிறது

தள்ளுவண்டிகளுக்கு எதிரே இருக்கும் நீண்ட பாலத்தின் பிடிசுவரில் கிட்டதட்ட ஐநூறு காக்கைகள் வரிசையாக அமர்ந்திருக்கும். முதல் போணி செய்வதற்குமுன். ஒவ்வொரு வண்டிக் கடையிலும் வெவ்வேறு உணவுகள் காக்கைகளுக்கு கிடைத்துவிடும்.

முனியப்பன் பலகாரங்களைச் சுட்டுக் குவியலாக்குகிறார். இப்போது இவரின் கைப்பக்குவத்தின் ருசியை அறிய காத்திருக்கிறது காக்கை கூட்டங்கள். செய்திதாளை கிழித்து பலகாரங்களின் வகைகளில் ஒவ்வொன்றை எடுத்து பிய்த்து தயாராக வைத்திருக்கிறார், மனைவி வருகைகாக

க்கா க்கா க்கா
ஒட்டுமொத்த காக்கைகளும் அதீத சத்ததுடன் தரை இறங்குகிறது. பத்தடி தூரத்தில் முனியப்பன் மனைவி வருகிறாள்.

இவ்வளவு நேரம் என்னா பண்ணுனே
சீக்கிரம் வரமாட்டியா

நான் என்ன சும்மாவா இருக்கேன்
எனக்கும் வேல சரியா இருக்கு

சரி இந்தா என்று பிய்த்து வைத்திருந்த பலகாரகளை நீட்டுகிறான்.
வாங்கியவள் விவசாய நிலத்தில் நெல்மணி தூவுவது போல் தூவுகிறாள் எல்லா காக்கைகளும் இரை எடுக்கிறது.

அந்த காட்சியை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம்
அந்த கூட்டத்தில் நாள்தோரும் நானும்.

சிறுவர் கதை | காகத்தை ஏமாற்றிய நரி | லேவ் டால்ஸ்டாய் |கதைச்சொல்லி – நீதிமணி

சிறுவர் கதை | காகத்தை ஏமாற்றிய நரி | லேவ் டால்ஸ்டாய் |கதைச்சொல்லி – நீதிமணி

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv #ChildrenStory To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know…
தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 7: சிறகுகளோடு சில நிமிடங்கள் (காகங்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

நம்மிடையே...நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்.. காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை .. "இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி பூமியில் வாழ்கிறார்கள் என்று கருதி உணவளிப்பது.. காகம் கரைந்த திசையிலிருந்து விருந்தினர்கள் வருவார்கள்…