அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது…..
பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று, ஆங்காங்கே அமர்ந்து இறைகளை தின்று கக்கி எசறிவிட்டு சென்றது….
கார்காலம் முடிந்து பனிக்காலம் வந்தது, வெயில் காலம் பல் இழித்து பச்சை உயிர்களுக்கு உயிர் கொடுத்தது……
அயராது காற்றில் ஓங்கி பறந்த செத்தைகள் மறந்தை தாண்டி, மறப்பொந்தையும் அடைந்தன…
அளவான வெயில் விழும் தருணம், பதமான மழைநீரின் தேங்கல்,.. காற்று நுழைந்து வெளிவர ஏற்ற தகவமைப்பு,….
அன்று சுத்திய காகமோ, பருந்தோ அள்ளி எசறி தின்று மென்று துப்பி விட்டு போன எத்தனையோ எச்சத்தில் ஒன்று இன்று துளிர்த்து…..
அந்த ஐம்பதடி வளைநெழி பனையில் அயராது அழகால் கொத்தி எதர்ச்சையாக விட்டு சென்ற மரங்கொத்தியின் பல நாள் உழைப்பு துளையில்…
இன்று பல இயற்கை மாற்றத்தில் மரத்தினுள் உள்ளே ஓர் விதை துளிர்விட்டது….
இதுவே *இயற்கை எனும் முயற்சியின் முதல் கரு* ஆனது….
மனிதனின் மனம் அப்படித்தான்…
எங்கோ பணியாற்றி இரத்தத்தை சிந்தி பலன் கிடைக்கும். சமயத்தில் சந்தர்ப்ப சூழலால் அதை விட்டு விலகி வர வேண்டிய நிலை உருவாகிறது…
இருப்பினும் மனிதன் அதனை மனதில் கொள்ளாது முயற்சியை கையில் கொண்டால்…
மென்மேலும் எந்த இடர் வந்தாலும் பயம் இன்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்…
வாழ்வில்… அடுத்த நிலைக்கு செல்லாத காரணம்…
முயற்சியின் முதல் கரு முயலாமை….
முயற்சி நல் வினை ஆக்கும்…..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments