க. புனிதன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க. புனிதன் கவிதைகள்

க. புனிதன் கவிதைகள் ********************************* 1. பூத்த குவளை  தெருவோரம் முக்கில் அழுக்கு சட்டையோடு நிற்கும் வேலை இல்லாதவன் போல் உணவு மேசையில் கழுவாத காவி ஏறிய தேநீர்க் குவளைகள் அவள் முன் இருக்கின்றன மழையில் நடனமாடும் மனநலமற்றவன் போல் அழுக்குப்…
க.புனிதன் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க.புனிதன் கவிதைகள்

க.புனிதன் கவிதைகள் ************************************************ 1. தேநீர்க்காரரின் பசி என்றாவது ஒரு நாள் பட்டாணி விற்கும் சிறுவனின் கால் நனைக்க விரும்புகிறது கடல் அலை நாள் முழுவதும் குடும்பத்திற்கு உழைப்பவரின் விருப்ப குறியீடை விரும்புகிறது கவிதை எப்போதும் பட்டாம் பூச்சி பிடித்து இருக்கும்…
க. புனிதன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | Two New Tamil Poems Written By Poet K Punithan | www.bookday.in | கவிதை எழுதுதல்

க. புனிதன் எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்

க. புனிதன் எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள் வாசனை எதிரி என நினைத்து கண்ணாடியில் தனக்குத் தானே அலகில் கொத்தி கொள்ளும் பறவை போல் அல்ல பூனை கண்ணாடியில் தன் மேனி உரசி தன் வாசனை கண்டு கொள்ளும் ......................................................................... சப்தம்…
க.புனிதனின் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிதைகள் - Tamil Haiku Poems - Poetry | Haiku Kavithaikal - https://bookday.in/

க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்

க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள் 1 வரி வரியாய் வரிகளை வாசித்தது சோளத்தட்டை தின்னும் மாடு   2 கிணற்றுக்குள் ஒலிக்கும் மழைக் குருவிகளின் சப்தம் வெளிவர மனமில்லை தவளைக்கு   3 பயணத்தின் போது கேட்கும் சில்லறை சப்தம் அமைதியாய்…
Book Day | ஹைக்கூ கவிதைகள் | Haiku Poem

ஹைக்கூ கவிதைகள் – க. புனிதன்

குயில் கூவும் போது மலை பள்ளத்தாக்கில் வெள்ளம் வடிந்தது ... புழுவை விழுங்கிய மரங்கொத்தி சப்தம் வித்தியாசமாய்க் கேட்கிறது ... மழைப் பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தேன் தாளம் இசைத்தது ... கொஞ்சம் தூரம் நகரும் நத்தை பின்னோக்கி நகர்வதில்லை ... தண்ணீர்…
Jen Cinema Kavithai By K. Punithan ஜென் சினிமா கவிதை - க. புனிதன்

ஜென் சினிமா கவிதை – க. புனிதன்

நாம் அடைய வேண்டிய
ஊரின் பெயர்
தேநீர் பானம்

இடையில் வரும் சிற்றூர்கள்
குக்கூ
நிலவு
மூதூர்
தென்றல்
சிற்றெறும்புகள்

கோப்பையில்
தேநீர் தயாரிக்க
ஒரு கருப்பு நகைச்சுவை
பாலில் கலந்து
சர்க்கரை தூவும்போது
வெட்டுக் கிளியின் சப்தம்

ஏற்ற இறக்கமான
கோப்பை
அதில் வண்ணத்து பூச்சி போல்
பிடிக்கும் கை பிடி

இரண்டு கரைகள்
பருகும் கடல்
தவறி சிந்திய
தேநீர்த் துளிகள்

கோள்கள்
கோப்பையில்
தன் பிம்பம் தெரியும்
நுரைகள்
ஜென் சினிமா

Buddhanukku maru peyar mama Poem by k. Punithan புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை - க. புனிதன்

புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை – க. புனிதன்

பாப்பா பார்த்தவுடன்
மாமா என்றது
புத்தனுக்கு மறு பெயர்
மாமா
நாய்க் குட்டி
மழைத்துளி
டெடி பொம்மை
மகிழ்ச்சி

ஊர் சுற்றி வந்த நாயை
தெள்ளவேரி என திட்டினாள்
அம்மா
ஏனோ புத்தனின் ஞாபகம் வந்தது

பட்டு நூல் நூற்கும்
சின் கோனா மரம்
போதி மரம் எனக்கு

புத்தன் கண் மூடி அமர்ந்திருந்தார்
பட்டுப் புழுவின்
அமைதியான நூற்பிசை கேட்டு

நூலகம் அருகே
மரக்கிளையில்
அமைதியாய் நூல் நூற்கும்
பட்டு புழு

Pen Gnani Poem By K. Punithan. பெண் ஞானி கவிதை - க. புனிதன்

பெண் ஞானி கவிதை – க. புனிதன்




ஆணுக்கு
வீடு வாசல்
தெரு
புளிய மரம்
தம் அடிக்கும்
நிழல் கூடம்
என்று வெவ்வேறு நிலம் இருக்கிறது

வீடு
தெருமுக்கு தேநீர் கடை
எங்கே வேண்டுமானாலும்
தேநீர் பருக முடியும்

புத்தர் உள்பட
எந்த ஆணாய் இருந்தாலும்
துறவி ஆகிறேன் என
வெளியேற முடியும்

களி மண்ணில்
சின்ன சிலை செய்து
வீட்டில் வைத்து கொண்டாடும்
பெண்ணின் துறவறம் வேறு

நறுக்கும்
வெண்டை காயில்
ஒதுக்கி வைக்கும்
காம்பை கூட
கலை பொருளாய் பார்க்கும்
அவள் அக மகிழ்வு வேறு

Paravai Noi Poem By K. Punithan பறவை நோய் கவிதை - க. புனிதன்

பறவை நோய் கவிதை – க. புனிதன்




அன்னத்தின் காயத்திற்கு
மருந்திட்ட
சித்தார்த்தன் வழியில் கோழிகள் வளர்த்தேன்
அன்னம் போலவே இருந்தது
வெக்கைக் கழிசல் நோய் வந்து
கோழிகள் செத்து போயின.

மனம் சோகையான கோழி போலவே
நீண்ட உறக்கத்திற்குப் போனது
உறக்கத்தில் இருப்பது போல்
நடித்து வலையில் இருந்து
தப்பித்த விலங்கு போல்
மனம் விழித்து கொண்டது

இயற்கையைக் கவனிக்க
ஆரம்பித்தேன்
எலுமிச்சை மரத்திற்கு
வேப்பம் புண்ணாக்கு இட்டேன்

என் உடம்பில் பூத்த
காயங்களே
ரோஜா பூக்கள் ஆயின.

மாட்டுச் சாணத்தை
மண் புழு எருவாக்கி
வயலில் விவசாயம் செய்தேன்
மனம் மகிழ்வாய் இருந்தது.