உன்னுடன் பேசிய
ஒரு சில நிமிடங்களே
இன்னும் உயிருடன்
இருக்கின்றன

கண்கள் எழுதிய
கவிதைக் கண்ணீரை
வாசிப்போர் யாரோ ?

வினையே ஆடவர்க்குயிர்
அது காதலாய்
இருந்தாலும்.

தனக்கு எவ்வளவு
வேலையிருத்தாலும்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும்
உள்ளங்களால்
மட்டுமே
பூமி சுழலுகிறது.

பாக்கு மட்டைகளுக்கான
விளம்பரம் இப்போது
பாலித்தீன் பைகளில்.

நான் எங்கே இருந்தாலும்
இதயம் எப்போதும்
உன்னிடம் மட்டுமே.

விலையுர்ந்த மகிழுந்தில்
சோகப் பாடல்களே
கேட்கின்றன

பரபரப்பான சாலை
ஓரங்களில்
முட்செடி
வேடமிட்டு
ஒளிந்திருக்கும்
இலந்தை.

– இரா. மதிராஜ்

காங்கேயம்
திருப்பூர் மாவட்டம்
அலைப்பேசி
9788475722.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *