Subscribe

Thamizhbooks ad

மனிதகுலத்தின் பொக்கிஷம் கவிதை – நாகூர் பிச்சை

மனிதன் மனிதனுக்காகவே கண்டுபிடித்தும்
கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கின்ற
விடயம்தான் அறிவியல்..

ஒன்று இருப்பதை கண்டு பிடிக்கிறான்
இல்லையேல் இருப்பதற்காக
கண்டுபிடிக்கிறான்..

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அந்த வானையே
துளைத்து வாழத் துடித்தாலும்..

மனிதனின் வாழ்க்கையை மேன்மை
படுத்துவது கடந்தகால அனுபவங்களும்
அத்தாட்சிகளும் ஆசைகளும் எச்சரிக்கைகளும் தான்..

ஒரு பொருளின் ஆயுட்காலமும் உபயோகமும்
அதிகமாக இருக்க வேண்டும் என்று
சொன்னால்..

அதனுடைய விதிமுறைகளை படித்துவிட்டு
விதிமுறைகளின்படி அதனை
செயல்படுத்தப்படும் போது தான் நாம்
நினைத்தது சாத்தியமாகும்..

அதுபோலத்தான் மனிதகுலம் சிறப்பதற்கு
மனிதனுக்கு என்று வழிமுறைகள் நிச்சயம்
வேண்டும்.

ஆனால் அதனை வழிவகுப்பது மனிதனே
வகுத்துக் கொண்டால் சரியாக இருக்காது..

எப்படி ஒரு பொருளை உருவாக்கிய நிறுவனம்
அதன் விதிமுறைகளை பட்டியலிடுகிறதோ..

அதே போன்று தான் மனிதன் மனிதனுக்காகவே
எழுதப்பட்ட விதிமுறைகள் சற்று ஏதேனும் ஒரு
விடயத்தில் குறை உள்ளதாகவே காணப்படும்..

நாம் நிகழ் கால அனுபவங்களை பார்க்கலாம்
எழுதப்பட்ட சட்டங்கள் எத்தனை முறைகள்
திருத்தி அமைக்கப்படுகிறது..
இன்னும் எத்தனை சட்டங்கள் திருத்தி
அமைக்கப் படலாம்..

ஆக மனிதன் மனிதனுக்காக செய்யப்படும்
எந்த ஒரு சட்டதிட்டங்களும் முழுமை பெறாது
என்பதே நிதர்சனம்..

அப்படி என்றால் மனிதன் வாழ்வதற்காக
நடைமுறை சட்ட திட்டங்களை வழிவகுக்க
மனிதனைப் படைத்த ஒரு சக்தியால் மட்டுமே
இயலும் என்பது உண்மை..

அப்படிப்பட்ட சக்தி தான் இப்பிரபஞ்சத்தை
படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றது..

அப்படிப்பட்ட சக்தியின் மூலமாகவே தான்
படைத்த மனிதகுலத்தை சிறப்பாக வழிநடத்த
முடியும்.

அப்படி மனிதகுலம் சிறப்பதற்காக மனிதனைப்
படைத்த சக்தியினால் இறக்கப்பட்டதே வேதம்..

அந்த வேதம் மனிதர்கள் மூலமாக
இயற்றப்பட்டிருந்தால் அது நிச்சயமாக
முழுமை பெற்றிருக்காது..

இப்படிப்பட்ட வேதம் நிச்சயமாக இறைவன்
புறத்திலிருந்து மட்டுமே இறக்கப்பட்டிருக்க
வேண்டும்..

அப்படிப்பட்ட வேதமானது ஆச்சரியம்
ஊட்டக்கூடிய அதிசயத்தக்க அத்தாட்சிகளை
உள்ளடக்கிய ஒரு மிகச் சிறந்த
அருட்கொடையாகத் தான் இருக்கின்றது..

எக்காலத்திலும் எவராலும் மாற்ற படாமலும்
மாற்றுவதற்கான அவசியம் இல்லாமலும்
இருப்பதால் அது ஒரு பொக்கிஷமாகவே தான்
மனித குலத்திற்கு இருக்க முடியும்..

அப்படிப்பட்ட வேதத்தின் மூலமாகத்தான்
மனிதன் தனது வாழ்வை சிறப்பாக
அமைத்துக்கொள்ள முடியும்..

இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு
இயற்கை சக்தியும்
மனித சக்தியும் மட்டுமே இவ்வுலகில்..

ஆனால் இறைவனை ஏற்றுக்
கொண்டவர்களுக்கு அனைத்துமே ஒரே சக்தி
தான் அது இறை சக்தியே..

பகுத்தறிவு என்பது இறையை உணரவே..
அந்த இறைவன் இருப்பதற்கான அத்தாட்சிகள்
ஏராளம் வேதத்தில் உண்டு..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here