கோவை ஆனந்தனின் கவிதைகள்
உன் தூரிகை நானாக
**************************
நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன்
தூரிகை நானாகிறேன்…
போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…
புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….
வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும் வறுமையெனும் பிணிபோக்க….
உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….
பூவாசம்
**********
பூக்களின்வாசம் வீசும் வழித்தடத்தில்
தனிமையில் பயணிக்குமொரு நாளில்
கைகள் நிறைய பூக்கள் பறித்து
வாசத்தை நாசிவழியே நுகர்ந்து
நுரையீரலிலுள்ள அசுத்தங்களத்தனையும்
வெளியேற்றிச் சுத்தமாக்கி
அக்கம்பக்கம் சுற்றிலும் பார்த்து
காவலாளியில்லாத வேளையில்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
தன்னைத்தானே உலர்த்தி
துருப்பேறி நகரும்போதெல்லாம்
கிரீச்சிடும் கம்பிவலைக் கதவுகளை விலக்கி நுழைகிறேன்
முள்வேலிகளாலான பூந்தோட்டத்திற்குள்…
பூத்துக் குலுங்கும் சோலைவனத்துக்குள்
எனக்குமுன்னே முன்கதவுகளை திறக்காமல்
இரகசியமாய் நுழைந்து களவாடும் கூட்டமொன்றை
விழிகள் விரித்துக்கண்டேன்
கண்காணாத காட்சிகளாய்…
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பசுஞ்செடிகளின் பூக்களில் அமர்ந்தெழும் தேனீக்கள்
துளி துளிகளாய்ச் சேகரித்த பூந்தேனைச் சுமந்து
போர்விமானங்களைப்போல
சிறகுகளிலிருந்து வெளிப்படும் ரீங்காரஓசையுடன்
பறக்கின்றன திசையெங்கும்….
கொத்துக்கொலைகளாய்க் கைகளில் சேகரித்து வெளியேறி நுகர்கிறேன்
கையிலிருந்த பூக்களின் வாசத்தை…
பூக்களின்இதழ்களுக்குள் ஒளிந்திருந்த தேனீயொன்று
சிறகுகள் விரித்து பறந்தது வேறொரு சோலைவனத்தைத் தேடி…
கிணத்துக்கடவு
கோவை ஆனந்தனின் கவிதைகள்
தூரிகை
***********
நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம்
உன்
தூரிகை நானாகிறேன்…
போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…
புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….
வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும் வறுமையெனும் பிணிபோக்க….
உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….
நிலைக்கண்ணாடி
**********************
நீ நின்று ரசித்த
உன்னழகை
உன்அறை நிலைக்கண்ணாடியும்
அதைவிட்டு நீ நகர்ந்தபின்
சிலநிமிடங்கள்
கதவுகளோடு கண்ணை
மூடி ரசிக்கிறது…
அவசரமாய்க் கேசத்தை சரிசெய்து
முகப்பசைகளைப்பூசி ஒப்பனைகள் செய்து
கடந்துசெல்லும் யாரும்
உன்னிப்பாய்க் கவனிக்கவில்லை
இதுவும் உன்நினைவில் இருப்பதை…
பாதரசங்கள் பூசிய கண்ணாடியின் மீது
இதுவரை ஒட்டவேயில்லை-
உன் அட்டைப்பொட்டுகளையும் விரல் தாரைகளையும் தவிர
உன்னைப்போன்றொரு உருவம்…
எதிரில் நின்றவரின் உருவத்தை மிகைப்படுத்தாமலும்
மீதம் வைக்காமலும் காட்சிபடுத்திய கண்ணாடி
ஏமாற்றத்துடன்
நீ
விட்டுச்சென்ற உன்னழகின்
சாயலில்
இன்னொரு பிம்பத்தை பதிவுசெய்ய
இன்னும் உறங்காமல் விழித்தே கிடக்கிறது…
சந்தனவிறகுகள்
********************
மலையின் கொடையில் செழித்த சந்தனமே
மரங்களில் தனக்கென
தனிமதிப்பை தக்கவைத்ததால்
மனிதனும் இதைப்பார்த்து கொண்டானொரு வியப்பு
வாசனையால் கொள்ளையடித்த சந்தன விருட்சங்களை
கோடாரிகளால் சிதைக்கும்போதெல்லாம் குதூகலிக்கிறது மனிதமனம்
பசிபோக்கும் அடுப்புகள் எதற்கும் எளிதில்கிடைக்காத
சந்தனவிறகுகள் உரசும்போதெல்லாம் வாசம் மாறாததால்
அதிசயப்பிறவியோவென!
அறிந்தவர் எவரும் வெறுப்பதில்லை
பசிக்காக சேகரித்த விறகுகள் வீதியில்போனதால்
வனத்தினை அழிப்பதாய் தண்டனை வனவாசிகளுக்கு
காடுகளில் களவாடப்படும் தந்தங்களையும் பின்னுக்குதள்ளி
வனத்துறையுமறியாத பாதைகளில் பயணமான ஊர்திகளில்
இரகசியமாய் பச்சிலைகள் போர்த்தி முன்னுக்குப்போகிறது
அரசுஇலாகாக்களின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பித்த
விறகுகள் அத்தனையும் மொத்தச்சந்தையில் விற்பனைக்கு
அக்னிக் குண்டத்தில் எரிந்த நெருப்பில்
கடவுளுக்கும் கோடிபிரியமோ சந்தனவாசம் கோவில்கருவறைக்குள்ளும்
ஆட்சி அதிகாரங்களில் மிதந்த தேகங்கள்கூட
சுவாசங்கள் நின்றபின் மயானத்திலும் நிரூபிக்கறது
கட்டுக்கட்டாய் அடுக்கிய விறகுச்சுமைகளில் தன்பலத்தை
விடைபெற்ற ஆளுமைகளின்
பெருமையும் புகழும்
ஆடம்பரமாய் எரியும் சந்தனவிறகுகளின் வாசத்தில்
அதிகாரத்திமிர்களும் ஆணவங்களும் எரிந்து சாம்பலாகின்றன
கைப்பிடிச்சாம்பலும் கடைசியில் கரைகிறது ஊரோரநதிக்கரையில்
கோவைஆனந்தன்
குமாரபாளையம்,
கிணத்துக்கடவு, கோவை 642109
ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு
இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து
இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள்
வெந்து தணிந்திட வேதனை கொண்டு
வீதியில் நின்றாரே-நம்
சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச்
செவிட்டில் அறைந்தாரே-மோடி
செயலால் இறந்தாரே!
இந்திய வீரர் இறப்பது மோடியின்
இழிந்த அரசியலாம்-அவர்
சொந்தம் அழுது சோர்ந்திடக் கண்டும்
சொகுசாய் வாழ்பவராம் -அட
பந்தம் இலாதவர் பாசம் இதுதான்
பாருங்கள் மக்களே-பகை
தீருங்கள் மக்களே!
சிலையால் அரசியல் சில்லறை மதவெறி
சீர்கெட்ட ஆட்சியாம் -இவர்
கொலைகள் செய்வது கொள்கை என்றாகும்
கொடுமைக் காட்சியாம்-அட
மலைபோல் பொய்யை மனதாரச் சொல்லும்
மோடியே சாட்சியாம்-அவர்
தேடிடும் வீழ்ச்சியாம்!
வங்கியின் பணத்தை வாரிச் செல்வர்கள்
வளம்பெறக் கொடுத்தவராம்-அவர்
வாங்கிய பணத்துடன் வெளிநாடு ஓடிட
வசதியும் செய்தவராம்-மோடி
ஏங்கிடும் மக்களை ஏழ்மையில் தள்ளி
ஏளனம் செய்பவராம்-மோடி
ஏளனம் செய்பவராம்!
வரியாய் ஜிஎஸ்டி விதித்து மக்களை
வாடிட வைத்தாரே-நாட்டில்
சிறுகுறு தொழிற் சாலைகள் எல்லாம்
சிதைந்திடச் செய்தாரே-மோடி
நரியாய்ச் செய்த வேலை அதனால்
நாட்டை அழித்தாரே-மோடி
நாட்டை அழித்தாரே!
ஊழல் மதவெறி உலுத்த சாதி
ஒழிந்திடச் சங்கூது-அவர்
வீழ உழைத்திடு வீதியில் களமிடு
வெற்றி என்றோது-பாஜகாவை
ஆழப் புதைத்திடு ஆக்கம் நிலைத்திடு
அதற்கிணை ஏது-இனி
அதற்கிணை ஏது!
உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா.சந்திரகுரு
இந்தியக் குடியரசு இப்போது சரிவைக் காணத் தொடங்கியிருக்கும் போதிலும், நாகரீகமான மற்றும் அவ்வளவாக நாகரீகமற்ற வட்டாரங்களின் உரையாடல்களில் இருந்து வெளிவருகின்ற ஒரேயொரு பல்லவி நலிந்து போயிருக்கின்ற ஜனநாயகத்திற்கான உறுதியான அறிகுறியாகவே இருக்கின்றது. அந்தப் பல்லவி பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடியின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் வரும் போதெல்லாம் அவர்களுக்கான ‘மாற்று எதுவுமில்லை’ என்பதாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. மோடியின் கவசத்தில் ஓட்டைகள் விழுந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்ற சிலர் மாநில அளவிலே ஒரு சில தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக நிச்சயம் போராடவே செய்யும் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனாலும் அதைப் பின்தொடர்ந்து ‘ஆனாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று என்று எதுவுமில்லை’ என்ற பல்லவி உடனடியாக வந்து விடுகிறது.
பிளவிற்கான விதைகளை விதைத்து, விஷம் தோய்ந்த வெறுப்பு பேச்சுகளுக்குப் பாதுகாப்பு அளித்து, குடிமைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தி, வெறுப்பின் ஆவேசத்தை பிரதமர் கட்டவிழ்த்து விடுகிறார்’ என்பதாக அந்த உரையாடல் இருக்கின்றது. அதுவே அவரைத் தகுதி நீக்கம் செய்யப் போதுமானது. ஆனாலும் உடனடியாக அந்த உரையாடலை ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
பாராளுமன்றத்தின் தரையை முத்தமிட்ட பிரதமர் நம்மிடம் இருந்தார். அந்த முத்தம் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான மரண முத்தமாக மாறியது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
வலுவான தேசப் பாதுகாப்பிற்கான உறுதியை நமக்கு வழங்கிய பிரதமர் இருந்தார். ஆனால் அவரால் எல்லைப் பகுதியில் இழப்பு, நமது நில எல்லைக்குள்ளாகப் பிணைக்கப்பட்டது, இருமுனைப் போருக்கான வாய்ப்புகள் போன்றவையே விளைந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் சீனா குறித்து ஒரு கேள்வி கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று தேசம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
பலமான உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு உறுதியளித்த பிரதமர் இருந்தார். அந்த இலக்கு உண்மையில் எட்டப்பட்டுள்ளது. தொண்டு மிஷனரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இப்போது வேட்டையாடப்பட்டு வருவதால் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிந்திருப்பவர்கள் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்லக் கூடாதா?
எல்லை மாநிலங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த பிரதமர் இருந்தார். பத்தாண்டுகளுக்கு அப்புறம் முதன்முறையாக பஞ்சாபில் வன்முறை தலைகாட்டியிருப்பதை அரசாங்கமே ஒப்புதல் அளித்துச் சொல்கிறது. வடகிழக்கில் அமைதிக்கான ஆதாயங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. காஷ்மீரில் அதிகரித்து வரும் அந்நியமும், அடக்குமுறையும் தொடர்கின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
பங்குச்சந்தைகளை உயரச் செய்த பிரதமர் இருந்தார். கடந்த இருபதாண்டுகளில் இருந்துள்ள மற்ற அரசாங்கங்களைப் போல அவரது அரசாங்கமும் ஓரிரு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. உண்மையாகச் சொல்வதென்றால் மக்கள்தொகையில் முதல் பத்து சதவிகிதம் பேர் இந்த ஆட்சியால் ஒருவேளை செழித்திருக்கலாம். ஆனால் நம்மிடம் 2003-2009 காலகட்டத்தில் இருந்த எட்டு சதவீத வளர்ச்சி விகிதம் இப்போது இல்லை. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வறுமை நிலைகளில் இருந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவமின்மை, பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. சுமாரான அளவிலேயே ஏற்றுமதிகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த பணவீக்கம் 1991க்குப் பிறகு மிக அதிகபட்சமாக – இந்த நவம்பரில் 14.3 சதவிகிதம் என்று அதிகரித்துள்ளது. ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகும், அவையெல்லாம் முந்தைய அரசாங்கத்தின் அல்லது அமெரிக்க மத்திய வங்கியின் தவறுகள் என்றே சொல்லப்பட்டு வருகின்றன. ‘உண்மையில் மாற்று எதுவுமில்லைதானே!’
ஊழலைக் குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் இருந்தார். மூலதனச் செறிவு அதிகரித்திருந்தாலும், கட்சிகளின் தேர்தல் நிதியை நிர்வகிக்கும் விதிமுறைகள் பின்னடைவைக் கண்டுள்ள போதிலும், சரியான சித்தாந்தத்திற்கு முன்பாகத் தலை வணங்கி நிற்கும் வரை மற்றவர்களின் மூலதனத்தைக் காட்டிலும் ஒரு சில மூலதனம் மட்டுமே பெரிது என்ற சமிக்ஞையைத் தெரிவிக்க அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே ஊழல் குறைந்திருக்கலாம் என்றாலும், அதைக் காண்பதற்கோ அல்லது அதைப் பற்றி பேசுவதற்கோ நம்மை அனுமதிக்காத அளவிற்கு மிகத் திறமையாக அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான், ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
அந்தப் பல்லவி இவ்வாறாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற கருத்து தொடர்கிறது. தார்மீக, ஆன்மீக மறுமலர்ச்சிக்குப் பதிலாக இருண்ட, மோசமான வகுப்புவாத தூண்டுதல்களே ஹிந்து மதத்தின் பெயரால் வெளியேற்றப்படுகின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’.
அதிகாரப்பூர்வ வட்டங்களை மறந்து விட்டுப் பாருங்கள். இந்திய ஜனநாயகத்தின் மிகப்பரந்த கௌரவம், அதன் கலாச்சாரம், அதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டன. ஆனால் நிறுவனம் சார்ந்து இருக்கின்ற ரிப்பன்ட்ராப்களால் இந்த உலகை வேறுவிதமாக நம்ப வைக்க முடிகின்றது. உங்களுடைய மக்களை எந்த அளவிற்கு அதிகமாகத் தாக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உலகளாவிய உங்கள் பங்கு அதிகமாக உயரும் என்று நமது தலைவரை அவர்கள் நம்ப வைத்திருக்கிறார்கள். உண்மையாகவே ‘மாற்று எதுவுமில்லை’.
அனைவரைப் பற்றியும் துப்பறிந்து, அனைவரையும் அச்சுறுத்தி, தகவல் ஒழுங்கைக் கட்டுப்படுத்தி மிகவும் பாதுகாப்பாக நாம் இருப்பதாக நம் அனைவரையும் அரசு உணர வைத்திருக்கிறது. ஆனால்… ஆனால்… ஆனால் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மற்ற பல்லவிகளைப் போலவே ‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவியும் கட்டுடைக்கப்பட வேண்டும். குடிமக்களில் சிலர் பலன்களைப் பெற்றிருக்கலாம் அல்லது திட்டங்களின் பயனாளிகளாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் இந்த அரசாங்கம் செயல்திறன் கொண்டது என்று கூறுவதை நம்புவதற்கு அதன் உண்மையான சாதனைகள் போதாமையுடனே இருக்கின்றன. சில பகுதிகளில் வெற்றிகளை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்தியக் குடியரசு எதிர்கொண்டிருக்கும் அடிப்படை நெருக்கடிகளுக்கு முன்பாக அந்த வெற்றி மங்கிப் போகிறது.
‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவிக்கு எதிர்க்கட்சிகளின் நடத்தையே உதவி வருகிறது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை உதறி விட்டு காங்கிரஸால் வெளியே வர முடியவில்லை. எதிர்கட்சிகள் வசமிருக்கின்ற பல மாநில அரசுகளால் நிறுவன நன்னடத்தைக்கான மாதிரிகளாக அல்லது தாராளவாத, ஜனநாயக விழுமியங்களின் கொள்கைரீதியான பாதுகாவலர்களாக இருக்க முடியவில்லை. ஒருபுறம், இந்திய குடியரசு இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று சொல்ல விருப்பமுடையவையாக இருக்கின்ற எதிர்க்கட்சிகள் மறுபுறத்தில் குடியரசிற்கு இருத்தலியல் நெருக்கடி இருப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்பவையாக இருக்கவில்லை. அந்த இருமைதான் எதிர்கட்சிகளை அதிகம் காயப்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் குடியரசைப் பாதுகாக்கின்ற நோக்கத்திற்காக ஒன்றுபடவில்லை. அவற்றின் உணர்வுகள் அனைத்தும் அவர்களுக்குள்ளான சண்டைகளிலேயே செலவிடப்பட்டு விடுகின்றன. நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருபவர்கள் புதுமுகங்கள் வெளிவர அனுமதிப்பதில்லை.
இவையனைத்தையும் ஒப்புக் கொண்டாலும், ‘மாற்று எதுவுமில்லை’ என்கின்ற எண்ணம் உண்மையில் மிகவும் அபத்தமாகவே இருக்கிறது. கூட்டணி அரசியலுக்கான சாத்தியம், சீர்திருத்தங்களின் சிக்கல்கள், இந்த நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் நுட்பமான பின்னல் இழைகள் என்று சமீபகால வரலாறு குறித்து இருந்து வருகின்ற மகத்தான மறதியாலேயே இதுபோன்ற ‘மாற்று எதுவுமில்லை’ என்ற சிந்தனை முன்வருகிறது. மாற்றாக வேறொன்றுமில்லை என்றால் ஆழ்ந்த வகுப்புவாதம், அடக்குமுறை இரண்டையும் எதிர்கொண்டிருக்கிற ஒரு ஜனநாயகத்தில், அரசியல் போட்டியும், அதிகாரத்தைக் குறைப்பதும் தானே மாற்றாக இருக்க முடியும். குறைவான அதிகாரம், அதிக போட்டி போன்றவற்றின் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு எதிர்க்கட்சியும் முழுமையாக நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை.
ஆக ‘மாற்று எதுவுமில்லை’ என்று பரவலாக இருந்து வருகின்ற பல்லவியின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். அந்தப் பல்லவி மூன்று விஷயங்களின் அறிகுறியாக இருக்கலாம்: இந்திய மேல்தட்டினரை போலியான களத்திற்குள் சிக்க வைத்திருக்கின்ற அரசியல் அழகியலானது இருக்கின்ற ஆபத்துகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நாயக வழிபாட்டின் அடிப்படையில் சிந்தனைகளை இடைநிறுத்தி எதையும் எளிமைப்படுத்துவதற்கான விருப்பம் இருந்து வருகிறது. அல்லது ஒருவேளை இவ்வாறு ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது ‘வகுப்புவாத விஷம், எதேச்சாதிகார அடக்குமுறை குறித்து எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை’ என்று கூறுவதற்கான வித்தியாசமான வழியிலான உரையாடலாகக்கூட இருக்கலாம்.
தற்போதைய போக்கு பேரழிவை நோக்கிச் செல்வதாக இருந்து வருகின்ற நிலையிலே, ‘மாற்று எதுவுமில்லை’ என்று கூறுபவர்கள் அதன் மூலமாக இப்போது இருக்கின்ற யதார்த்தத்தை விவரிப்பவர்களாக இருக்கவில்லை. ஜனநாயகத்தில் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது அந்த ஜனநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதையே குறிக்கும் என்பதால், ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்பவர்கள் ‘ஜனநாயகத்தை நாங்கள் வெறுக்கிறோம்’ என்றே நேரடியாகச் சொல்லிக் கொள்ளலாம்.
https://indianexpress.com/article/opinion/columns/narendra-modi-alternative-bjp-opposition-7695387/
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு
ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் – தமிழில்: ச.வீரமணி
அமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன், டிசம்பர் 9-10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு”, மேம்போக்காகப் பார்க்குங்கால், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒன்று போன்றும், ஜனநாயகத்தை அரித்துவீழ்த்திட “எதேச்சாதிகாரிகளால்” மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான ஒன்று போன்றும் தோன்றும். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள்களாகக் கூறப்பட்டவை, மூன்று. அவை, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல், ஊழலுக்கு எதிராகப் போராடுதல் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பையும், மரியாதையையும் மேம்படுத்துதல் என்பனவாகும்.
இணையம் வழியாக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டிற்கு 100 அரசாங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 89 பேர் பங்கேற்றனர். இவ்வாறு பங்கேற்றவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இந்த உச்சிமாநாடு, “ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவோ, எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற் காகவோ” கூட்டப்பட்ட ஒன்று அல்ல என்பதும், மாறாக இது, அமெரிக்கா, “ஜனநாயக உலகத்தின்” மீதான தன் மேலாதிக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும், சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுக்குள் வைத்திடுவதற்கான தன் போர்த்தந்திரத் திட்டங்களை விரிவாக்கிடுவதற்குமானது என்பதும் நன்கு தெரிகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பைடன், “எதேச்சாதிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளுவது” பற்றி பேசியபின், மாநாட்டில் அவர் சென்று அமர்ந்த இடத்தில் அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் யார் தெரியுமா? தங்கள் நாடுகளில் எதேச்சாதிகார ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜயில் பொல்சனாரோ (Jair Bolsonaro)வும், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte)யும் ஆவார்கள். பொல்சனாரோ, தங்கள் நாட்டின் பூர்வகுடியினரின் உரிமைகளை ஒடுக்குவதன் மூலமும், அமேசான் மழைக்காடுகளை அழிப்பதன்மூலமும், மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அத்தொற்றின் ஆபத்து குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாததன் மூலமும் மக்களால் மிகவும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் நபராவார். ரொட்ரிகோ துதெர்த்தே, போதை மருந்துக்கு எதிராகப் போராடுகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவிக்கும் ஆட்சியை நடத்துவதாலும், இதழாளர்கள் மீதும், மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் அடக்குமுறையை ஏவி, அவர்களைச் சிறையில் அடைத்திருப்பதன் மூலமும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பவர்.
மேலும அமெரிக்காவின் நலன்களுக்கு சேவகம் செய்திடும் நபர்கள் அழைக்கப்பட்டிருப்பதும் நன்கு தெரிந்தது. தன்னுடைய சொந்தக் கொள்கையான “ஒரே சீனம்” கொள்கையை மீறிச் செயல்படும் தைவான் பிரதிநிதிகளுக்கும், வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுராவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க ஆதரவுடன் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஜூன் குவைடோ (Juan Guaido)விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த உச்சிமாநாட்டிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் எவை எவை அழைக்கப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தால், அமெரிக்காவில் சூழ்ச்சித் திட்டங்கள் நன்கு விளங்கும். பாகிஸ்தானை அழைத்திருந்த அதே சமயத்தில் (பாகிஸ்தான், அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது), வங்க தேசத்தையோ அல்லது இலங்கையையோ அது அழைக்கவில்லை. இந்தியா, நேபாளம் மற்றும் மாலத்தீவுகள் ஆகியவை அழைக்கப்பட்ட இதர நாடுகளாகும். பாகிஸ்தானைக் காட்டிலும் வங்க தேசம் ஜனநாயகத்தில் கீழான நாடா? அமெரிக்காவிற்கு, ஆப்கானிஸ்தானத்திற்குச் செல்ல பாதை தேவை. அதற்கு பாகிஸ்தானின் தயவு தேவை. இதுதான் அமெரிக்காவிற்கு, பாகிஸ்தானை அழைப்பதற்கான தீர்மானகரமான காரணியாக இருந்தது.

பிரதமர் மோடி உச்சிமாநாட்டுக்கு அனுப்பியிருந்த அறிக்கையில், தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், “எங்கள் நாகரிக சமுதாயத்தின் அடிப்படைக்கூறுகளுக்கு, ஜனநாயக உணர்வு என்பது பிரிக்கமுடியாது பின்னிப்பிணைந்த ஒன்று என்றும்” அறிவித்தார். இவ்வாறான சுய-தம்பட்ட உரையில், அவர் இந்தியாவில் ஜனநாயக அமைப்புமுறைக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல்கள் அல்லது பிரச்சனைகள் குறித்து எதுவும் இல்லை.
பைடன், மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றுகையில், அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டுவரும் அரசு சாரா நிறுவனமான, ஃப்ரீடம் ஹவுஸ் (Freedom House) அளித்திருந்த அறிக்கையானது 2020இல் உலகத்தில் சுதந்திரம் என்பது தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். இதே ஃப்ரீடம் ஹவுஸ் 2021இல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை “சுதந்திரமாக இருந்த நாடு” (“free”) என்ற நிலையிலிருந்து “ஒரு பகுதி சுதந்திரமாக உள்ள நாடாக” (“partially free”) மாறியிருப்பதாகத் தரம் தாழ்த்தி இருக்கிறது.
ஜனநாயகத்தின் வீழ்ச்சி குறித்து, பைடன் தாக்கல் செய்துள்ள மற்றுமொரு அறிக்கையானது, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிலையம் (International Institute for Democracy and Electoral Assistance) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலிருந்து கையாளப்பட்டிருக்கிறது. இந்த நிலையமானது, ‘2021 ஜனநாயகத்தின் உலக நிலைமை’ (‘The Global State of Democracy, 2021) என்ற தன்னுடைய அறிக்கையில், “ஜனநாயகம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையை, இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் … போன்ற நாடுகளில் பளிச்செனத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது குறித்து மிகவும் மோசமாக அறிக்கைகள் வெளிவந்திருந்தாலும், அதனையெல்லாம் அமெரிக்கா பொருட்படுத்தாது என்பது தெளிவாகவே தெரிகிறது. ஏனெனில் அதற்கு அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியாவை அது கருதுகிறது. அதனால்தான் அது, மோடி அரசாங்கமானது குடிமக்களின் உரிமைகளைப்படிப்படியாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது பற்றியோ, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது பற்றியோ, அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும், இதழாளர்களுக்கும் எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்கள் மிரட்டப்பட்டு வருவது குறித்தோ பொருட்படுத்தவில்லை. அதைப் பொருத்தவரைக்கும், அமெரிக்காவின் திரித்துக்கூறப்படும் தர்க்கங்களின்படி நரேந்திர மோடியைவிட வங்க தேசத்தின் ஷேக் ஹசினா அதிக எதேச்சாதிகாரியாவார்.
அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறியபோதிலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அதன் போலி வேடம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1980களில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில், ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (NED-National Endowment for Democracy) ஒன்று நிறுவப்பட்டது. அதன் குறிக்கோள் வாசகம் (motto), “ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக சுதந்திரச் சந்தைகள்” என்பதாகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்கா, தனக்கு எதிரான நாடுகள் எனக் கருதிய நாடுகளில் செயல்பட்டுவந்த எதிர்க்கட்சிகளுக்கு ஏராளமான நிதியை அளித்து வந்தது.
இதனைக் கிளிண்டன் அரசாங்கமும் தொடர்ந்தது. இப்போது அந்த மேடையானது “ஜனநாயகங்களுக்கான சமூகம்” (CoD-“Community of Democracies”) என மாற்றப்பட்டது. அதன்கீழ் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த சமயத்தில் 1999-2000இல் இந்தியாவில் ஆட்சி செய்த வாஜ்பாயி அரசாங்கம் இதில் மிகவும் ஆர்வத்துடன் தன்னை இணைத்துக்கொண்டது. இந்த அமைப்பின் சார்பாக 2000 ஜூனில் வார்சாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டை நடத்திட உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
பின்னர், ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக வந்தபின்னர், 2005இல் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷூம் இணைந்து, “உலகளாவிய ஜனநாயகத்திற்கான முன்முயற்சி” (“Global Democracy Initiative”) என்னும் கூட்டு அறிக்கையை அறிவித்து, இந்தியா, அமெரிக்காவுடன் தன்னை இணைத்துக் கொண்டது.
அமெரிக்க ஜனநாயக நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளைக் கவிழ்ப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் உதவுவதேயாகும். இவ்வாறு அது, 1950களிலிருந்தே லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகியவற்றிலிருந்த கௌதமாலா, பிரேசில், சிலி, கிரேனேடா, ஈரான், தென் கொரியா, இந்தோனேசியா ஆகியவற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களைக் கலைத்திடவும், பலவீனப்படுத்திடவும் உதவி இருக்கிறது.
அமெரிக்கா மேற்கொண்ட மற்றொரு முறையானது, “ஜனநாயகத்தை விதைப்பதற்காக” சில நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகவே தாக்குதல்களைத் தொடுப்பதும், அவற்றை ஆக்கிரமித்துக்கொள்வதுமாக இருந்து வந்திருக்கிறது. இவற்றுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானமாகும்.

பைடன், இப்போது நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், ஜனநாயகத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஜனநாயகத்திற்கான திட்டத்திற்கான கூட்டுப்பங்காண்மைக்காக ஒரு நிதியம் (Fund for Democratic Renewal and a Partnership for Democracy programme) 424 மில்லியன் டாலர்களில் உருவாக்கப்படும் என்றும், இந்த நிதியம் அமெரிக்கா அரசாங்கத்தாலும், அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்கா ஏஜன்சி (USAID-United States Agency for International Development) மூலமாகவும் நிர்வகிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் புவிசார்அரசியல் நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிடும் விதத்தில் இதன் நிதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்துகொள்வதில் அதிகம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை.
ஜனாதிபதி பைடன், உலக ஜனநாயகத்திற்காகப் போராடும் வீரனாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்குப் பதிலாக, அமெரிக்காவில் ஜனநாயக அமைப்பு முறைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கவனம் செலுத்துவது நல்லது. பைடன் பேசும்போது, “வாக்குச்சீட்டின் புனித உரிமை” குறித்தும், எப்படி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான உரிமை குறித்தும், அவ்வாறு அறிந்துகொள்வதே “ஜனநாயகத்திற்கான சுதந்திரத்தின் நுழைவாயில்” என்றும் தன்னுடைய நிறைவுரையில் பூசிமெழுகி யிருக்கிறார். இவர் கூறியுள்ள இந்த சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை என்பது அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டும், சுருக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவின் 19 மாநிலங்களில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களில், மக்களின் வாக்குரிமைகளுக்கான சட்டங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கருப்பின மக்களுக்கும், ஒருசில குறிப்பிட்ட மக்கள்தொகை பிரிவினருக்கும் வாக்குரிமைகள் அளிக்கப்பட்டிருந்தது இதன்மூலம் பறிக்கப்பட்டிருக்கின்றன.
பைடன், ஜனநாயகம், ஊழல் ஒழிப்புக்கு எதிரான போர் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய மூன்று அம்சங்கள் தொடர்பாகவும் நடந்துள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, அடுத்த ஆண்டு அனைவரும் நேரில் பங்குகொள்ளக்கூடிய விதத்தில் ஓர் உச்சி மாநாடு நடத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார். இவற்றின்மீது தாங்கள் சாதித்தது என்ன என்பது குறித்து கலந்து கொள்ளும் தலைவர்கள் கூறுவார்கள் என அவர் எதிர்பார்த்துள்ளார். இந்த விசயத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் அது அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பது என்பதே வேறுசில விஷயங்களை நிறைவேற்றுவதற்காக என்பது அதற்கு நன்கு தெரியும்.
(டிசம்பர் 15, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 9 – ஜா. மாதவராஜ்
“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை.
வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும்.
தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
மேலும் மேலும் பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்”
– கேத்தி பர்ன்ஹாம் மார்ட்டின்
“நாம் காரை ஒட்டிச் செல்கிறோம். அல்லது வேறொருவர் கார் ஒட்ட, நாம் பின்னிருக்கையில் அமர்ந்து செல்கிறோம். அப்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து சக்கரத்தில் மாட்டிக் கொள்ள நேரிட்டால் நமக்கு வேதனையாய் இருக்குமா இருக்காதா? நானும் மனிதன்தான். எங்காவது கெட்டது நடக்கும்போது கவலை வரத்தான் செய்யும்”
குஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட மோடி, 2013ம் ஆண்டு சிறப்பு புலனாய்க் குழுவால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்பு வெளியிட்ட கருத்து அது. “கலவரங்களுக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?” என்பது அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில் அது.மோடி கவலைதான் பட்டிருந்தார். வருத்தப்படும் தொனி கூட அவரது வார்த்தைகளில் இல்லை. அப்படி கார்ச்சக்கரத்தில் மாட்டிக் கொள்லாமல் தப்பிப் பிழைத்த இரண்டு ‘நாய்க் குட்டிகளை’ 17 வருடங்கள் கழித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் போய் சந்தித்தது.

குஜராத்தில் அகமதாபாத்தில் குப்பை கொட்டும் இடம் அருகே வசித்து வந்த முகமது ரஃபிக்கும், சேரிப்பகுதியில் வசித்து வந்த பூஜா ஜாதவும்தான் அவர்கள். இருவருமே 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் தப்பிப் பிழைத்த போது, ஒரு வயதுக் குழந்தைகள்.
2019ல் அவர்களுக்கு பதினெட்டு வயதாகி முதன் முறையாக ஓட்டுப் போட தகுதியான பிறகு, ராய்ட்டர்ஸ் நிறுவனம் இருவரையும் அருகருகே நிறுத்தி பேச வைத்தது. “காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தோ, சுவாரசியமான கற்பனைக் கதைகளைக் கேட்டோ குழந்தைகள் வளருவார்கள். நாங்களோ இந்து முஸ்லீம் கலவரங்களைப்பற்றி கேட்டுத்தான் வளர்ந்தோம்” முகமது ரஃபீக் தனது செல்போனை நோண்டியபடி பேசினான். இழப்புகளும், வலியும் அவனது வார்த்தைகளில் தோய்ந்திருந்தன.
ஒரு மாத காலம் நீடித்த கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் மட்டும் 800 முஸ்லீம்களும் 255 இந்துக்களும் கொல்லப்பட்டனர். அங்குள்ள சேரிப்பகுதியில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தார் ரஃபீக்கின் தந்தை. மதவெறிக் கும்பல் அந்த கடைக்குத் தீ வைத்தது. தப்பி ஓடும்போது ரஃபிக்கின் தந்தை காலில் போலீஸின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உயிருக்குப் பயந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். பின்னர் அகமதாபாத்தில் இருக்கும் மிகப் பெரிய குப்பைக் கொட்டும் இட த்திற்கு அருகில் வசித்து வந்தனர். “பிஜேபியின் மீது இருக்கும் ஆத்திரம் என் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது” என்றான் ரஃபீக்.
2002ல் ரஃபீக் குடும்பம் கொடூரமாக விரட்டப்பட்ட இடத்திற்கு அடுத்த சந்திலிருந்து அப்போது தப்பித்த இன்னொரு ஒரு வயது குழந்தைதான் பூஜா ஜாதவ். அவளது பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. கலவரம் முடிந்த பிறகு, சேதமடைந்திருந்த தங்கள் வீட்டிற்கே திரும்ப வந்து வாழ்த் தொடங்கியது அவளது குடும்பம். ஆனால் பக்கத்து வீடுகளில் ஏற்கனவே வசித்து வந்த முஸ்லீம்களுக்கு பதிலாக வேறு முஸ்லீம்கள் இருந்தார்கள். ”எங்களுக்கு வேறு வழியில்லாமல் அங்கு மாட்டிக் கொண்டோம்.” என்றாள் பூஜா.
“மோடியின் வெற்றி என் அம்மாவுக்கு சந்தோஷமளித்தது. அம்மாவின் சந்தோஷம் எனக்கு சந்தோஷம் தந்தது. எனக்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பு இல்லை. ஆனால் மோடி பிடிக்கும்.” என்றாள். “பிஜேபி ஆட்சி செய்யும் போது, பக்கத்தில் வசிக்கும் முஸ்லீம்களால் எங்களுக்கு தொந்தரவு வராது” என்று தொடர்ந்தாள். “முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடைவெளியும், எல்லையும் இருக்க வேண்டும்” என்பதே அவளது முடிவான கருத்தாக இருந்தது. ”மோடி முஸ்லீம்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் நாங்கள் எப்படி நாத்தம் பிடித்த குப்பையில் கிடந்து வாழ்கிறோம் என்பதை வந்து பார்த்திருப்பார். முஸ்லீம்களை அவமதிக்கும் அவரது செயலே எனது அரசியல் முடிவை தீர்மானித்தது” என்றான் ரஃபீக்.

முகமது ரஃபீக்கும், பூஜா ஜாதவ்வும் குஜராத் கலவரங்களிலிருந்து உருவானவர்கள். இருவரின் வாழ்க்கை நிலைமையில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு குடும்பங்களும் அடுத்த வேளை உணவுக்கு அல்லல் பட்டன. இருவருமே படிக்கவில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உழைத்தார்கள். ஒரு நிரந்தரமான வேலை, நல்ல காற்றோட்டமான சூழலில் வசிப்பிடம் வேண்டும் என்னும் கனவுகளைச் சமந்திருந்தார்கள். இருவரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக ஒட்டு போட இருந்தார்கள். அவர்களின் ஒட்டு யாருக்கு என்பதை அறிவதுதான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நோக்கம். பதினேழு வருடங்களும் அவர்களுக்குள் எப்படி உறைந்து போயிருந்தன என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.
தங்கள் அன்றாட வாழ்வின் பிரச்சினைகள், அவைகளுக்கான தீர்வுகள், அதையொட்டிய அரசியல் என்று அவர்களது சிந்தனைகள் விரியாமல், காயடிக்கப்பட்டிருந்தது. உள்ளுக்குள் அச்சம், வன்மம், பாதுகாப்பற்ற உணர்வு எல்லாம் நிறைந்திருந்தது. அவர்களை தனித்தனியாய் இரண்டு கூறுகளாக்கி, இடையே காலம் கோடு கிழித்து வைத்திருந்தது. இதுதான் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் கதை. ஷாஜஹான் பனோவும் அப்படி தப்பிப் பிழைத்த இன்னொரு நாய்க்குட்டிதான். அவனும் கடும் வெறுப்பில்தான் இருந்தான்.
2002ம் ஆண்டு சிறுவனான அவன் தன் அம்மாவோடு அகமதாபாத்தின் முக்கிய சந்தையில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த நாளில் கலவரம் வெடித்தது. பயத்தோடு அன்று இரவு முழுவதும் அந்த சந்தையிலேயே ஓளிந்திருந்த அவர்கள் அடுத்த நாள் நிவாரண முகாம்களுக்குச் சென்றனர். அங்கே தங்கள் உறவினர்களும், நண்பர்களும் என்ன ஆனார்களோ என பதற்றத்துடன் பல மூஸ்லீம்கள் காத்துக் கிடந்தனர்.
ஒரு மாதம் கழித்தே அவர்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சிட்டிசன் நகரில் ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்து. முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று கட்டித் தந்த குடியிருப்புகள் அவை. இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒல்லியாய் காணப்படும் ஷாஜஹானுக்கு இப்போது 23 வயது.

“இப்படி வசிக்க ஒரு இடமாவது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் நாங்கள் தினம் தினம் இந்தப் புகை, நாற்றம், குப்பைகளுக்குள் கிடந்து சாகிறோம். எந்த வசதியும் இல்லை. ஆனால் நாங்கள் வேறு எங்கே போக முடியும்?” வெறுத்துப் போய் பேசுகிறான் ஷாஜஹான். 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களில் அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கலாம். ஆனால் கடுமையாய் அடிபட்டு காயங்களோடும், கொடூரமான நினைவுகளோடும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் இப்படி தாங்கள் கால காலமாய் வாழ்ந்த இடங்களை விட்டு அகற்றப்பட்டிருந்தார்கள். வாழ்க்கை முற்றிலுமாக புரட்டிப் போடப்பட்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாய் இருந்தார்கள்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு பெரிதாய் ஒன்றும் செய்யவே இல்லை.” என்றார் வழக்கறிஞர் ஷம்ஷத் பதான். முஸ்லீம் மக்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுத் தர போராடிக்கொண்டு இருந்தவர் அவர். “இன்றைக்கு இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் அடுத்தடுத்த கட்டிட குடியிருப்புகளில் வசிக்கும் காட்சியை பார்க்க முடியாது. பிரிக்கப்பட்ட நகரமாகி விட்டது. முஸ்லீம்கள் ’கெட்டோ’க்களில் வாழத் தள்ளப்பட்டு விட்டார்கள்” என்று மேலும் சொன்னார். (கெட்டோ என்பது சிறுபான்மையினர் மட்டுமே வசிக்கும் மோசமான பகுதி. ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான பாசிஸ்ட் அரசு நடத்திய இனப்படுகொலை காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெட்டோக்களில் யூதர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தார்கள்.)
பதற்றம் நிறைந்த இடங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் இடங்களை விற்பதை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, ‘The Distrubed Areas Act’ 1991ல் மதக்கலவரங்களை தடுக்கும் பொருட்டும், அமைதியை ஏற்படுத்தும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்தச் சட்டத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு மேலும் அதிகாரத்தை கொடுத்து திருத்தம் செய்திருந்தார் மோடி. “அது அரசே முன்னின்று நடத்திய பிரிவினை” என்றார் பதான்.

“அதன் விளைவு, முஸ்லிம்கள் எல்லாம் இழிவான பகுதிகளில் மொத்தம் மொத்தமாய் ஒதுக்கப்பட்டனர். வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் எல்லாம் மாநிலத்தில் வேறு யாருக்காவது இருக்கலாம். நிச்சயமாக முஸ்லீம்களுக்கு இல்லை” என்று அவர் சொல்வதில், 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தொடர்கதை எவ்வளவு கொடுமையானது என்பது தெரியும். மொத்த அவலத்தையும், ஆபத்தையும் இரண்டே வார்த்தைகளில் சொல்கிறது அகமதாபாத்தில் இருக்கும் ஜுஹாபுரா பகுதி. அங்கு மட்டும் நான்கு லட்சம் முஸ்லீம்கள் இப்போது வசித்து வருகிறார்கள். ஏற்கனவே இருந்த முஸ்லீம்களோடு, கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் அங்கு சேர்ந்திருந்தனர். அகமதாபாத்தில் இருக்கும் இந்துக்கள் ஜூஹாபுராவை ‘குட்டி பாகிஸ்தான்’ என்றே அழைக்கிறார்கள்.
இந்துத்துவ அரசியலின் – மோடி ஆட்சியின் – நோக்கமும் பாதையும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. இந்திய பாசிசத்தின் அடையாளமும், தடயமும் அந்த ‘குட்டி பாகிஸ்தானில்’ இருக்கிறது. மக்களை பிளவு படுத்தி, சிறுபான்மை மக்களை ஓரிடத்தில் ஒதுக்கி, பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு எதிராக காலமெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரத்தை கேள்வி கேட்பாரில்லாமல் நிறுவும் அராஜகத்தை குஜராத்தில் மோடி காட்டி இருந்தார். மக்களை அவர்களின் நிஜமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல், உணர்வுகளின் வலைகளில் வீழ்த்தி விட்டு, அவர்கள் மீது தங்கள் மிருகத்தனமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாசிச சாம்ராஜ்யத்தின் வேர் குஜராத்தில் ஆழமாக இறங்கி இருந்தது. பாவம் பூஜா ஜாதவ் என்ன செய்வாள்? குஜராத்தில் 2002ற்கு பிறகும் மதக் கலவரங்களும், பதற்றங்களும் நீடித்துக் கொண்டேதான் இருந்தன. வன்மத்தையும், பழிவாங்கும் இயல்புகளையும் விதைத்த நிலத்தில் வேறென்ன விளையும்?
தேசத்தில் நடந்த மதக் கலவரங்களின் சராசரியைக் காட்டிலும், குஜராத்தில் அதிகமாக நடந்து வந்தன என்றே புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 2003ம் ஆண்டிலிருந்தே மதக் கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.

அதிலும் 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பெரும் பதற்றத்தையும் சேதங்களையும் ஏற்படுத்தி இருந்தது. 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 56 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயம் பட்டனர்.
ஆனால் மோடி குஜராத்தில் 2002ற்கு பிறகு கலவரங்களே நடக்கவில்லை என்றும், அமைதி நிலவுவதாகவும், வளர்ச்சி மட்டுமே ஒரே நோக்கமாகவும் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது சாம்ராஜ்ஜியத்தை குஜராத்திலிருந்து இந்தியாவுக்கு விரிவுபடுத்த ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தார். 2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி டெல்லி ரமலான் மைதானத்தில் கூடியிருந்த முஸ்லீம் மக்களிடையே பேசினார். சிறுபான்மை மக்களிடையே திட்டமிட்டு முதன்முறையாக அவர் பேசிய கூட்டம் அது.
“கிரிக்கெட் மேட்சில், பட்டம் விடுவதில், இருசக்கர வாகனம் மோதியதில் உருவாகிய அற்ப காரணங்களுக்காக எல்லாம் மதக்கலவரங்கள் வெடித்த காலம் ஒன்று குஜராத்தில் இருந்தது. என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் மீண்டும் அப்படி கலவரங்கள் நடக்க விடவில்லை. எனது மாநிலம் இப்போது முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஜாதி, மதங்களைத் தாண்டி அனைவரும் சமமானவர்களாகவும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.” இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பயங்கரமானவை என்பது இப்போது உண்மையை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
References:
* Polarised Politics: How two teenagers will vote after surviving 2002 Gujarat riots ( by Rupan Jain, Reuters, April 23, 2019)
* Muslims still consigned to Gujarat’s slums 15 years after 2002 Riots (by Rina Chandran, Wire, July 25, 2017 )
* Gujarat not riot–free since 2002 : Here’s the Proof (First Post, April 07, 2014)
* Meenakshi Lekhi’s Claim About ‘No Riots in Guj Post 2002’ is False ( The quint, Mar 17, 2020)
* 2008 Ahmedabad Bombings (Wikipedia)
* No Guilty feeling about Gujarat riots, says Modi (The Hindu, June 13, 2013)
* No riot in Gujarat during 10 year rule, Modi says in delhi ( The Times of India, Dec 1, 2013)
முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்
“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”
அடால்ப் ஹிட்லர்

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். இதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.
விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்து விட்டிருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.
2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் குறித்த செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலை குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி இங்கு முதலில் குறிப்பிட்டபடி தன் இஷ்டத்திற்கு திரித்துக் கொண்டார். அப்போது யாரும் பெரிதாய் அது பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. 2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.
“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் தொடர்ந்து செய்திகள் பரப்பி விடப்பட்டன. மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.
2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு இந்தக் கதையை தொடர்வோம்.
‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் கூட நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனால் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக மார்தட்டி பிரச்சாரம் செய்தார். மூலை முடுக்கெல்லாம் இந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை தான் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.
மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.
தொழில் வளர்ச்சி என்ற பேரில் டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’ என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டு இருக்கிறது.
2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City) திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.
முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.
குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரனையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.
அந்த கல்யாணசிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின. “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். இதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.
சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு காண்ட்ராக்ட் விட்டதாக இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது. ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.
2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
2019ம் ஆண்டில் மே மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.
அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன, காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலம் அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.
திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.
மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.
லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும். முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.
குஜராத்தில் நடந்த இந்த ஊழல்களுக்கு எதிரான சத்தங்கள் எல்லாம் மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும் எழும்பிய சத்தங்களில் அடிபட்டுப் போனது. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.
ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.
சரி, இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.
“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், ”நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.
ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, ”மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.
சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.
”மோடி ஊழல் கறை படியாதவர்” என்று அவர்களே தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?” என மோடி நாட்டு மக்களிடம் தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.
ஆனால் அவருக்கு குடும்பம் இருந்தது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான்.
அவரது 56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.
References:
* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM ( Narendara Modi websidte)
* Modi supporters aggressively pushed fake Assange Endorsement (Published in Outlook on 17th Mar 2014)
* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said (Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014)
* Sujalam gets CAG rap (Written by Kapildev, DNA dated Feb 20, 2009)
* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants (Desh Gujarat, Feb 18, 2014)
* Big Corporates got govt land cheap: CAG (Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013)
* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects plea filed by BJP Minister (Ahmedanbad Mirror, Nov 05, 2021)
* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe (DNA, Aug 27, 2011)
* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi (The Economic Times, Aug 28, 2011)
* Wikileaks never said Modi was incorruptible (Counter view dated Mar 18, 2014)








