ஹைக்கூ - கா.ந.கல்யாணசுந்தரம் | Haiku - Ka .Kalyanasundaram

* சருகுகள் விழுந்த மண்ணில்

முளைத்தெழுகின்றன

நிலையாமை எண்ணங்கள்

 

* மாலை நேரம்

சாய்ந்து படுக்கிறது

புத்தனின் நிழல்

 

* வலையில் சிக்கிய மீன்களை

மீண்டும் குளத்தில் விடுகிறான்

நீர்வட்டங்களைப் பரிசளித்தன

 

* வாழ்க்கை கனவுதான்

நிகழ்கால பயணிப்பில்

தியானப் பாதைகள்

 

* என்னைச் சுமந்தால்

வாழ்க்கை பாரம்தான்

காயப்படுகிறது காயம்

 

* ஒரு வெள்ளைத்தாளின்

இரு பக்கங்களும் நடத்துகின்றன

சொற்களின் அணிவகுப்பு

 

* மழலையின் கையசைப்பில்

மண்டிக்கிடக்கிறது

மனிதநேயம்

 

* கண்ணீர் கரை புரண்டது

விற்ற வீட்டின்

சிட்டுக்குருவிகளுக்காக

 

* மனிதநேயத்தின்

மகத்தான பங்களிப்பில்

கிராமத்து திண்ணைகள்

 

 

எழுதியவர் 

கா.ந.கல்யாணசுந்தரம்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

2 thoughts on “ஹைக்கூ மாதம் – “கா.ந.கல்யாணசுந்தரதின் ஹைக்கூ””
    1. சிறப்பான சிந்தனை
      சீரிய தமிழ் வரிகளில்
      உயரிய ஹைக்கூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *