samakaala-sutrusuzhal-savaalgal-webseries-45-written-by-prof-ram-manohar

தொடர் 45: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

        பொருளாதார பேதமில்லா கார்பன் உமிழ்வு கணக்கு! சூழல் பாதிப்பிலும் வருவதில்லை, பாரபட்ச பிணக்கு! சுற்றுசூழல் பிரச்சனைகள் என்றால், அழகான இயற்கை சூழல், வாழிடம்  மாசுபாடு அடைந்து, அதன் தொடர்ச்சியாக அங்கு வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் நோய்,உணவு…
சமகாலச் சுற்றுசூழல் சவால்கள்

தொடர் 44: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

      உலக மாநாடுகள் கூடினால் உண்மை நிலை உடன் மாறிடுமா!!? சுற்று சூழல் பிரச்சனைகள், பாதிப்புகள், உலகம் முழுவதும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டே இருந்துவருவது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்! ஆனால் இவற்றை பற்றி சிந்தித்து…
samakala sutrusoozhal savalgal 10 article by rammanohar சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 – முனைவர். பா. ராம் மனோகர்

உள்ளூர் மரங்கள் இன பாதுகாப்பு! உணர்வு பூர்வ தேவை, ஒருங்கிணைப்பு! உலக புவி தினம் 22.04.23 அன்று உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. நமது அரிய இயற்கை சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய…
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 8 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 8 – முனைவர். பா. ராம் மனோகர்



இந்திய பெருங்கடல் கழிவுகளும்! ஈடில்லா பொருளாதார இழப்புகளும்!
முனைவர். பா. ராம் மனோகர்.

கடல் என்பது நம்மில் பெரும்பான்மை மக்கள் பார்வையில் ஒரு நீல வண்ண அழகான இயற்கை நீரமைப்பு, ரசிக்கிறோம்! அரிய மீன்கள் தரும் அற்புத அட்சய பாத்திரம், மீனவர்கள் வாழ்வாதாரம், உண்மைதான்! ஆனால் இந்த இன்றியமையா இயற்கை சூழல் சமீபகாலமாக, உலகின் குப்பை தொட்டி போல் மாறுவது பற்றி அறிவோமா!? இயல்பான பெருங்கடல், எவ்வளவு மனித வாழ்வின் கழிவுகள் சுமந்து வருகிறது என்பதும், அதனால் பெருங்கடலில் உள்ள மீன்கள் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும்.

இந்திய பெருங்கடல் என்பது, புவியியல் மற்றும் புவி அமைப்பு ரீதியாக உலகின் மூன்றாம் மிக புகழ் பெற்ற 70 மில்லியன் சதுர கி. மீ பரப்பளவு உள்ள கடல் ஆகும். பல உலக நகரங்களை இணைக்கும் அதிக தாது உப்புகள் கொண்டு விளங்கும் இக்கடல் நம் நாட்டில் 7517கி. மீ கடற்கரை, மற்றும் 1382 தீவுகள் கொண்டுள்ளது. கடற்கரை நகரங்களில் அதிக பட்சத்தில் 250 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் கடலிலிருந்து 50கி. மீ தூரத்தில், தங்கள் வாழ்விற்கு கடலின் பொருளாதார நிலை நம்பியுள்ளனர் என்பது உண்மை. “நீல பொருளாதாரம்” என்ற அத்தியாவசிய பொருளாதார உயர்வு இந்தியாவிற்கு மிக முக்கியம் ஆகும்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 486 கடற்கரை நகரங்களில், 100000 மக்கள் தொகை கொண்ட 36 முதல் நிலை நகரங்களில் 12 பெரு துறை முகங்கள், 239 சிறு துறை முகங்கள் உட்பட ஆண்டுக்கு 100000 கப்பல்கள், இந்திய பெருங்கடல் ஒட்டி பயணிக்கின்றன. நீல பொருளாதார நிலை மேம்பட பல்வேறு நிலையில், நீடித்த நிலையான வளம், ஆறுகள் தொடர்பு, உணவு பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு, வணிகம், நவீன தொழில் நுட்பம், கண்டுபிடிப்பு, வேலை வாய்ப்பு, என பல்வேறு காரணிகள் பெருங்கடல் சூழல் உடன் தொடர்ந்து உலகம் உருவாகிய காலம் முதல், நம் சமூக பொருளாதார வளர்ச்சி பெற ஆரோக்கியமாக இருந்து வருகிறது. மேலும் கோவிட் -19 காலத்தில் கூட ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை உள்ள காலத்தில் 7.2 பில்லியன் டாலர் ஏற்றுமதி வணிகம் பெருகியுள்ளது.

இந்திய கடற்கரை பகுதியில் 4லட்சம் மீனவர்கள், தான் நம் கடலில் நீல பொருளாதார நிலை உயர காரணம் ஆகும். இந்தியா உலகின் 2 வது அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடு என கருதப்படுகிறது. இங்கு 2,50000 படகுகள் இந்த பெரும் பணியில் கடலில் பயணங்கள் செய்கின்றன. தொன்மையான இந்த கடல் வணிகம், உலக அளவில் தற்போது உள்ள 6% சதவீதம், 33%ஆக உயர வாய்ப்பு உள்ளது.

பெரும் கடல் வணிக பொருளாதாரம் கடலில் வெளியேற்றப்படும் கழிவுகளால் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது உணரப்படுகிறது. சாதாரண மாக கப்பல் வெளியேற்றும் எண்ணெய் மாசு, கப்பல் பயணிகள் கழிவு, நிலப்பகுதியிலிருந்து ஆறுகள், மூலம் அடைகின்ற பல்வேறு வகை மாசு பொருட்கள் அதிகம். பிளாஸ்டிக், வேதி, உரக்கழிவுகள்,, மக்காத வெவ்வேறு

வகை குப்பைகளை நீர் ஆதாரங்கள் அருகில் வெளியேற்றம் செய்யும் போது இறுதியில் கடலில் சென்று சேரும் நிலை, வருந்ததக்கது. குறிப்பாக, கடலில் மீனவர்கள் விட்டுவிடும் மீன் வலைகள், மீன் பிடி சாதனங்கள், படகு விபத்து ஏற்படும் போது உருவாகும் கழிவுகள் போன்றவை கடல் உயிரினங்களுக்கு மிகவும் அபாயம் தர கூடியது. ஐக்கிய நாடுகள் சுற்று சூழல் திட்ட (UNEP) அறிக்கையின் படி கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் 20%மீன் பிடிக்கும் வலைகள், வீண் ஆகிய கருவிகள் ஆகும். இந்தியாவில் மட்டும் 154,0008 மீன்பிடி வலை அமைப்பு,7285 எண்ணிக்கையில் சிறு பிடிப்பான் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் உலக அளவில் 6,40000 டன் மீன் பிடி வலைகள் கழிவுகளாக கடலில் விடப்படுகின்றன. மற்ற கழிவுகள் நிலப்பகுதியில் முறையாக மேலாண்மை செய்யும் போதுதான் அவை கடலுக்குள் வராமல் தவிர்க்க இயலும்.

இந்தியா புவியியல் ரீதியாக ஹர் முஸ் ஜலசந்தி மற்றும் மலாக்கா ஜல சந்தி இடையில் உள்ளதால், அதிக வணிக கப்பல் போக்குவரத்து இப்பகுதியில் தொடர்கிறது. நீல பொருளாதார முன்னேற்றத்திற்கு “சாகர் மாலா “திட்டம், பிரதமரின் (PMMSY)மத்ஸ்யசமாதா திட்டம், போன்றவை 20050 கோடி ரூபாய் மூலம் மீன் வளம் பெருகுதல், துறைமுகம் வளர்ச்சி, இவ்வாண்டு ஒன்றிய அரசு வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பு உள்ளது. ரூபாய் 6000கோடி திட்டம் மீனவர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் நீல பொருளாதார வளர்ச்சி பெருக முயற்சி எடுப்பினும், கடலில் குப்பை எனும் நிலை மாற்றம் செய்ய பன்னாட்டு கடற்கரை தூய்மை தினம், விழிப்புணர்வு ஆண்டு தோறும் உள்ளூர், (கடல்பகுதியிலுள்ள கிராம, நகரங்களில்)அரசு துறை மூலம் அனுசரிக்கப்படுகிறது. (MOES) ஒன்றிய நில அறிவியல் அமைச்சக துறை, (NCCR)தேசிய கடல் ஆய்வு மையம், (NCSCM)தேசிய கடற்கரை நீடித்த நிலை மேலாண்மை ஆய்வு மையம்,(MOEF)ஒன்றிய சுற்றுசூழல், வனம், பருவ கால மாற்ற அமைச்சகம், தேசிய கடல் கல்வி மையம் (NIO)போன்றவை தொடர்ந்து கடல் குப்பை குறைப்பு, உயிரின வேற்றுமை, கடல் அலை, காற்று, புயல்,, மீன் பிடிக்கும் பகுதி,, பற்றிய ஆய்வுகள் மேற்கொள்கின்றன. மேலும் அரசு தேசிய அளவில் “தேசிய பெருங்கடல் கழிவு கொள்கை “உருவாக்க உள்ளது.

பொருளாதார பெருக்கத்திற்காக, சுற்றுலா, வணிகம் ஆகியவை மேம்படும் திட்டங்கள் ஏற்படுத்தினாலும், அரிய பெருங்கடல் இயற்கை சூழல் உலகின் மிக பெரிய “கார்பன் உறிஞ்சு தொட்டி “, மற்றும் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் வேறுபட்ட சூழல் ஆகும்.கடற்கரை மக்கள் வாழ்க்கை, பொருளாதார நிலை, இயற்கை சமநிலை அனைத்தும் நீடித்த நிலை தொடர்ந்து சீராக இருக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் ஆகும். சிந்தித்து பார்ப்போம்!!

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 7 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 7 – முனைவர். பா. ராம் மனோகர்



 உணவுப் பழக்கங்களும்,
உலக வெப்பநிலை உயர்வும்!
முனைவர். பா. ராம் மனோகர்.

இருபது ஆண்டுகள் முன்பு நம் மக்களிடையே இருந்து வந்த உணவு முறை தற்போது இல்லை அல்லவா!? ஒவ்வொரு சிறு நகரங்களில் கூட வட இந்தியா, வெளிநாட்டு உணவு அங்காடிகள்! அங்கு சென்று உண்ணுகையில், ஒரு போலி நாகரீகம், கவுரவம், ஆனால் நம் உடல் ஆரோக்கியம், உணவு

கழிவு மாசு பற்றியும் சிந்தித்து பார்ப்பதில்லை!

மேலும் நாம் மேற்கொள்ளும் தினசரி உணவு பழக்கம் பற்றிய அக்கறை, நம்மில் பலருக்கும் இல்லை. நவீன உணவுகளுக்கு நாம் பலரும் அடிமையாகி விட்டோம். நகைச்சுவை நடிகர் வடிவேல் திரைப் படக்காட்சி ஒன்றில் கூறுவது, போல், இட்லி, தோசை போன்றவை ஆதிகாலத்து, நாகரீகம் அற்ற உணவுகளாக இளைய தலைமுறை எண்ணி, புதிய பெயர் புரியாத , எவற்றால் சமைக்கபட்ட உணவு என்பது அறியாமல் போதை போல் தொடர்ந்து சில குறிப்பிட்ட மேலை நாட்டு உணவுகள் உண்டு, ஆரோக்கியம் பாதிக்கச் செய்வது ஒரு புறம் இருப்பினும், இந்த உணவு வகை உற்பத்தி , உலக வெப்ப நிலை உயர்வுக்கும் ஒரு காரணி ஆக விளங்குகிறது.

நம் அனைத்து நாடுகளிலும் உருவாகிய உணவு பழக்கம், ஓரளவு, புவி வெப்ப நிலை உயர காரணம் என 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று விளக்குகிறது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP), பன்னாட்டு இயற்கை வள நிதியம் (WWF ), மற்றும் EAT & climate forest அறிக்கையில், புவி வெப்பம் உயர்வுக்கு காரணமாக உள்ள பசுமை குடில் வாயுக்கள் அதிகரிக்க உலகில் உள்ள 7.8. பில்லியன் மக்கள் (21.37%) செய்யும் உணவு உற்பத்தி முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியால், உணவு பழக்கத்தால்,, வளர்த்தல், அறுவடை, பதப்படுத்துதல், எடுத்து செல்லும் போக்குவரத்து,சேமிப்பு, சந்தைப்படுத்துதல், பயன்பாடு, கழிவு வெளியேற்றம் என பல்வேறு செயல்பாடுகள், இந்த நிலைக்கு காரணம் ஆகும்.

உலகில் ஒரு புறம் கிட்டத் தட்ட, 800 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு, பற்றாக்குறை, தரமற்ற உணவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நிலை இருக்கும் போது இப்படி ஒரு வினா எழுந்துள்ளது, வியப்பு அல்லவா! உணவு அனைவரும் உண்ணவே கூடாதா? என சிந்தித்து பார்த்தால், உண்மையில் நம் அறிவியல் அறிஞர்கள் சிலர் உணவு முறைகள், பருவ கால மாற்றம், நோய்கள் எனவும் தொடர்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். உணவு பழக்கங்கள் மேலை நாடுகளுக்கும், பல கீழை நாடுகளுக்கும் இடையில் வேறுபடுகின்றன.

159 நாடுகளில்744 வெவ்வேறு வகை உணவு உண்ணப்படுகின்றன. சாதாரணமாக ஐக்கிய அமெரிக்கா வில் ஒரு நாள் உணவு செலவு 28.4 டாலர் ஆகும். இதில் பழங்கள், காய்கறி 31.5%, வேர் முடிச்சு /விதை ,19%, மாமிசம் 15%, அடங்கியுள்ளது எனினும் வருவாய் குறைவான நாடுகளில் ஏழை மக்கள் இந்த அளவிற்கு செலவு செய்யும் நிலையில் இல்லை. டேனிஷ் நாட்டில் ஒரு வாரத்தில் கட்டாயம் 2

நாட்கள் தாவர உணவுகள் மட்டும் விற்கவும், மாமிச உணவினை ஒரு நாள் மட்டும் தான் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் உணவு, உலக வெப்ப மயமாக்கல் ஏற்படுத்துவதில் விவசாயம் தவிர அது தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் பங்கு வகிக்கின்றன. மாற்று முறை உணவு, போலி மாமிசம், முட்டை, பால் பொருட்கள் போன்ற தொழில் நுட்ப முறை உற்பத்தி வர வாய்ப்பு உள்ளது. விலை குறைவு காரணத்தால் மக்கள் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் உணவு தொழில் மென்மேலும் இயந்திரமயமாகினால், சூழல் மாசு, ஆற்றல் பிரச்சினை, போக்குவரத்து, பாக்கெஜிங், புவி வெப்பம் கூட ஏதுவாக கரிம காலடித்தடம் (CARBON FOOT PRINT )அதிகரிக்க கூடும்.

ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில், நவம்பர் 2021ல் நடந்த ஐக்கிய நாடுகள் கால நிலை மாற்றம் மாநாட்டில், விவசாயம் மூலம் புவி வெப்ப மயமாதல் அதிகரிக்கும் நிலை குறைக்க நடவடிக்கை ஏற்படுத்த தீர்மானம் உருவாக்கப்பட்டது.

மேலும், இத்தகைய உணவு பிரச்சினை உலக அளவில் இருப்பினும், உணவு வீணாதல், நவீன வெளிநாட்டு மாற்று உணவுகள், அதிக கொழுப்பு கலந்த உணவு பொருட்கள், சூழலுக்கு மிகுந்த பிரச்சனை ஆகியுள்ளது. பாரம்பரிய உணவுகள் மறக்கப் பட்ட நிலை, உள்ளூர் கரிம காய்கறி, மூலிகை, குறைபாடு, எனினும் உலக அளவில் உணவுண்ணும் பழக்கம் மாறுவது மிக கடின சவால் ஆகும். நம் நாட்டில் இளைய தலைமுறை, குழந்தைகள் மனங்களிலிருந்து, உணவு பழக்கம் செயல்பாடுகள், முறையில் உண்மைகள் உணர்வு பூர்வமாக அவர்களால் அறியப்படவேண்டும். உணவு பழக்கம் பற்றிய பாட திட்டம் பள்ளிகளில் தேவை ஆகும். ஊடகங்கள் மூலம் (youtube, FB, Telivision )பலரும் புதிய உணவு தயார் செய்யும் நிலை தனிமனித சுகாதார கேடு, சத்து குறைபாடு எனினும் உலக வெப்ப மயமாதல், உணவு மூலம் பெரும்பான்மை பங்கு அதிகம் ஆக வாய்ப்பில்லை. ஆனால் அது தொடர்பான தொழிற்சாலைகள் அதிகம் ஆகி அவற்றின் மூலம் பிரச்சினை கூடும் என்பது உண்மை.

தனி மனித ஆரோக்கியம் உணவு முறை மாற்றத்தினால் பாதிக்க பட்டு, அதன் தொடர் விளைவாக மருத்துவமனை,, மருந்து, கழிவு என்று ஒரு சங்கிலி போல் சூழல் பிரச்சனை ஒரு சவால் ஆகிவிடும்.

உணவு என்பது தனி மனித நுகர்வு என்றாலும், உற்பத்தி, சந்தைப்படுத்தும், அதற்குரிய தொடர் விளைவுகள் பற்றிய சிந்தனை நமக்கு தோன்றினால் .

விழிப்புணர்வு மேம்படும் வாய்ப்பு உள்ளது.

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 6 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 6 – முனைவர். பா. ராம் மனோகர்



தூய்மைத் தூதுவர்  வாழ்வின் துயரம்!
தொடர  வேண்டுமா, இனியும் அவலம்!?
முனைவர். பா. ராம் மனோகர்.

சுற்றுசூழல் தூய்மை, பேணுவது நம் ஒவ்வொரு குடிமகன் கடமை என்று நாம் அறிந்து, நடந்தாலும் கூட, நம் இல்லங்களில் மட்டும், தனிப்பட்ட முறையில் அதனை கடைபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்!ஆனால் பொதுவிடங்களில், உள்ள கழிவுகள் பற்றிய அக்கறை, நம்மில் பலருக்கும் குறைவு. மேலும் அவற்றை அகற்ற, மேலாண்மை செய்ய அரசு துறை பணியாளர்கள், இருக்கிறார்கள் என்பது ஒரு புறம், ஆனால் அவர்களும் நம்மை போல் மனித இனம் என்பதை நாம் சிந்திப்பது இல்லை! அவர்கள் பிரச்சனை, துயரம், பொருளாதார சிக்கல் போன்றவை சமகால சுற்று சூழல் சவால்களில் முக்கிய ஒன்று ஆகும்.

நம் இந்திய நாட்டில் முறை சாரா, கழிவு நீக்கும் தொழிலாளர்கள் அதிகம், அறிவியல் பூர்வ கழிவு மேலாண்மை இயந்திரம், கருவிகள் போன்ற நவீன முறைகள் செயல்பட துவங்கினாலும், மனித உழைப்பு மூலம் மேற்கொள்ளவேண்டிய சுத்திகரிப்பு பணிகள் ஏராளம். தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள் அபரிமிதமாக அதிகரித்து வரும் நிலை உள்ளது. அதனால் திடக் கழிவு மேலாண்மை நம் இந்திய நகரங்களில், கிராமங்களில் மேலும் சிக்கலாகிக்கொண்டு வரும் நிலையில் துப்புரவு பணியாளர் அல்லது தூய்மை தூதுவர் பணிகள் அதிகம் ஆகியுள்ளது.

துப்புரவு பணியாளர் தம் பணியில் மட்டுமல்லாமல் , அவர்கள் வசிக்குமிடங்கள் பாதுகாப்பற்ற நிலை, அபாயகரமான சூழலில் அமைந்துள்ளது. அவர்கள் செய்யும் முக்கிய பணிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. உள்ளாட்சி நிறுவனங்களில், இந்த நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆக பெரும்பான்மை நபர்கள் பணி செய்து வருகின்றனர். அங்கு உரிய உரிமை, சலுகை, சரியான உழைப்பூதியம் கிடைக்கும் நிலை கேள்விக்குறியது. மேலும் குழந்தை தொழிலாளர் உருவாகும் வாய்ப்பு உள்ளது. துப்பரவு பணியாளர் வாழ்க்கையில், அவர்கள் குழந்தை கல்வி மேம்பாடு, பழக்க வழக்கங்கள், சுகாதார நிலை, உணவு பற்றாக்குறை, போன்றவை பிரச்சனைகளாக உள்ளது.

துப்புரவு பணியாளர்களுக்கு என தனிப்பட்ட சட்டம், எதுவும் நம் நாட்டில் வரையறுக்கப்படவில்லை. அரசு துறை அளவிலும் எவ்வித கொள்கை இல்லாத நிலை நாம் வளர்ச்சி பெற்று விட்டோம் என்று நமக்கு நாம்

பறை சாற்றிகொள்வது எவ்வளவு பேதமை!?. வட்ட பொருளாதார கோட்பாடு மூலம் கழிவு மீள் சுழற்சி செய்து நம் சுற்றுசூழல் மேம்பாடு, அடைய உதவி வரும் இவர்கள் பற்றி சிந்தனை செய்யும் நிலையும் பொதுமக்களுக்கும், அரசு கொள்கை உருவாக் குப்பவர்களுக்கும் வரவேண்டும்.

துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை மக்கள், குப்பை கிடங்குகள் அருகில் வசிக்கிறார்கள்.

அதனால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகிவிடுகின்றனர். குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளின் படி 95% பணியாளர்கள் மயக்கம், 89% நபர்கள் தலைவலி போன்ற பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர். பாக்டீரியா, வைரஸ் நோய்கள், வயிற்று நோய்கள், (40%) போன்றவற்றாலும், சுவாச நோய்கள் (28%), காய்ச்சல் (78%), சளி (83.5%) ஆகிய உடல் ஆரோக்கிய சீர்கேடுகள் அறியப்பட்டுள்ளன.

பணிசூழல் என்பது இந்த பிரிவு தொழிலாளர்களுக்கு எப்போதும் ஒரு சவால் ஆகவே உள்ளது. ஆம். மக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவு போன்றவை பற்றிய விழிப்புணர்வு அதிகம் அரசு துறைகள் மூலம் மேற்கொண்டு வரும் நிலை இருப்பினும், அது செயல்படும் நிலை வருந்துதற்குரியது.அதனால் இந்த பணியாளர்கள், பல்வேறு குப்பைகளை பிரிக்கும் வேலை கூடுதல் ஆக செய்கின்றார்கள். எனவே இவர்களுக்கு வெவ்வேறு வகையில்

வீட்டு கழிவு, மருத்துவ கழிவு, மனித, விலங்கு இறப்பு கழிவு, உலோகம், கண்ணாடி என பிரிக்கும் போது விபத்து, உடல் காயம்,ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே இப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு கருவிகள், கையுறை, (Gloves ), முழு மறைப்பு காலணிகள், (Gumboots ), முழு மறைப்பு உடல் ஆடை (apron )ஆகியவை தரப்படும் திட்டங்கள் அரசு உருவாக்கி வருகிறது. ஆனால் அவை அனைவருக்கும் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. அதிலும் குறைபாடு உள்ளது.

இயல்பாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு இரத்த சோகை,காச நோய், ஊட்ட சத்து குறை பாடு என்ற ஆரோக்கிய பிரச்சனை அதிகம் உள்ளன.

மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட சாரார் எவ்வித பாதுகாப்பின்றி, வசிக்கும் இடம் முறையாக இல்லாமலும், சூழல் கழிவு அகற்றும் நம் சமுதாயம் சிந்தித்து வருகிறதா!? இது ஒரு புறம் இருக்க கழிவுகளிலிருந்து , பயன் தரும் பொருட்கள் தேடி, தேடி அலைந்து சேகரித்து வாழ்க்கை நடத்தி வரும் சிலரும் பல துன்பங்கள் அடைகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா மாநில ஐதராபாத் நகரில் குப்பை குவியல் மலை ஒன்றில் ஒரு பெண்மணி, மற்றும் 15 வயது சிறுவன் உட்பட மூவர் இறந்து கிடந்த செய்தி!, மும்பை மாநகர் பகுதிகளில் இரவில் குப்பைகளில் பயன் தரும் பொருட்கள் தேடி அலையும் குழுக்கள் அதிகம் ஆகிவிட்டது. அதில் 85% பெண்கள்,

5%குழந்தைகள், 10%ஆண்கள், 98% படிப்பறிவில்லாத இவர்கள்மட்டும் 60,000 எண்ணிக்கையில் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

ஆமாம், துப்புரவு பணியாளர்கள் பெயரில் மாற்றம் செய்து தூய்மை தூதுவர் என அழைப்பது மகிழ்ச்சி!ஆனால் அவர்கள் பெயரில் உள்ள கவுரவம் வாழ்க்கை நடைமுறைகளில் வருவதற்கு மேலும் பல முயற்சிகள் அரசு எடுக்க வேண்டும். பொது மக்கள், கற்றறிந்தவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த உண்மையான சுற்று சூழல் ஆர்வலர்கள் பிரச்சினைகள் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்குரிய வளமான தீர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடுதல் நன்று.

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 5 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 5 – முனைவர். பா. ராம் மனோகர்



திட்டமிட்டு பழுது ஆக்குதல்! தினம் புதிய பொருள் தேடல்!
முனைவர். பா. ராம் மனோகர்
சமீபத்தில் ஒரு நாள் எனது உணவு மேசையில், ஒரு புதிய பாத்திரத்தில் சாம்பார்! ஆனால் அது புதிய பாத்திரம் அல்ல, எனது தாய் நாங்கள் சிறு வயதாக இருந்த போது பயன்படுத்திய ஒன்று, என என் மனைவி கூறிய பின்பு அந்த பாத்திரத்தின் பாரம்பரிய பெருமை உணர முடிந்தது. பழைய பொருட்கள் பாதுகாப்பு, அதன் சிறப்பு புரிந்து கொண்டு, பல நல்ல பாரம்பரிய நினைவுகள் தொடர்ந்து வருவது, உண்மை அல்லவா!?. ஆனால் “இன்று புதிதாய் பிறப்போம் pirappom” மற்றும் “பழையன கழிதலும் புதியன புகுதலும் “என்ற சொற்றோடர்கள் புதிய, நவீன முற்போக்கு எண்ணங்களை தூண்டி விடவே நாம் பயன்படுத்தி வருவது அறிந்ததே! ஆனால் “இன்று புதிதாய் வாங்குவோம்!”என்ற மனப்பான்மை நம் சமுதாயத்தில் அதிகம் எழுந்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை இத்தகைய செயல்பாடுகளை முன்னெடுத்து, பெருமை கொண்டும் திகழ்கிறது. உலக மயமாக்கலுக்கு பிறகு நம் பொருளாதாரம், உயர்ந்த நிலையில் “நுகர்வோர் கலாச்சாரம் “பெருகியது., தொடர்ந்து இதனால் சுற்று சூழல் பாதிப்புகள், கழிவுகள் மிகுதியான தற்போதைய நிலை, அதிர்ச்சியினையும், வருத்தமும் அளிக்கிறது. எதிர்காலத்தினை எண்ணி அச்சம் கொள்ள வைக்கிறது.
நுகர்வோர், பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி குவிப்பது ஒரு புறம்! வாங்கிய பொருட்கள், கருவிகள், ஆகியவற்றில் சிறு குறைபாடு, தொழில் நுணுக்க குறைபாடு தீடீர் என்று ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட பொருள், கருவி குப்பையாக்கி விடுகின்ற மனநிலை நம்மில் மேலோங்கிவிட்டது. அப்பொருட்களை சீர் செய்ய நாம் மறுப்பதும் வழக்கம் ஆகிவிட்டது. இந்த சமுதாய நிலை புரிந்து கொண்ட பெரும் தொழில் நிறுவனங்கள், பெரும்பான்மை கருவிகளை, குறிப்பாக மின்னணு நுகர்வு பொருட்கள், செல் போன்கள், கணினிகள் ஆகியவற்றை ஒரு முறை, அவை பழுது ஆகிவிட்டால், அவற்றை “மீண்டும் சீர், சரி செய்ய இயலாது” என்ற நிலையில் வடிவமைக்க படுவதாக அறியப் பட்டுள்ளது.
திட்டமிட்டு இவ்வாறு பழுது ஆக்குதல் அல்லது பழைய பொருட்கள் ஆக்குதல் நிலை உருவாக்கி, நுகர்வோர் வாடிக்கையாளர்கள் மீண்டும் தெரிந்தோ, தெரியாமலோ புதிய பொருட்கள் வாங்க, தூண்டும் மனநிலை பெற ஏதுவாகிறது. இந்த கோட்பாடு 1928 ஆம் ஆண்டில் அமெரிக்க வணிக சந்தை வல்லுநர் ஜுஸ்டஸ் ஜார்ஜ் பிரெட்ரிக் என்பவர் உருவாக்கியது ஆகும். இவர் நுகர்வோர் புதிய பொருள் வாங்க வைப்பதை விட, அந்த பொருள் குறைந்த காலத்தில் பயன்படுத்தி, வீண்ஆக வைத்து புதிதாக அவர்களை வாங்க செய்து வணிகம் பெருக செய்யும் யுக்தி என குறிப்பிடுகிறார்.
மின்னணு பொருட்கள், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இத்தகைய திட்டமிட்டு வழக்கு ஒழிதல் என்ற நிலையில் நுகர்வோர் ஈடுபாடு அதிகரிக்க பல வழிகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் வணிகம் பெருகும், ஆனால் நுகர்வோர் ஏமாற்றம் அடைவது, மின்னணு கழிவுகள் அதிகம் தவிர்க்க இயலாது. வன்பொருட்கள் (Hardwares ) தரக்குறைவாக, உற்பத்தி பொருட்களில் அமைத்து அப்பொருட்களின் வாழ்நாட்களை 2 அல்லது மூன்று ஆண்டுகள் ஆக குறைக்கும் ஒரு குரூர வணிக தந்திரத்தினை அனைத்து நிறுவனங்கள் பின்பற்றி வருவதும் அறியப்பட்டுள்ளது. மேலும் பழுதான மின்னணு பொருட்களை, சீர் செய்ய அதன் செயல்பாட்டு, உட்பகுதியினை எளிதில் திறக்க இயலாத நிலையிலும், கருவிகளின் சிறப்பு இணைப்பு திருகுகள், மிக கடினமாக சாதாரண ஸ்குரு டிரைவர் மூலம் திறக்க முடியாத அளவில் அமைக்கும் படி பொருட்கள் உள்ளன. மேலும் புதிய பயன்பாட்டு செயல்முறைகள் ( Programming Applications )பழைய கருவிகள் ஏற்காத வண்ணமும் அவை உருவாக்கப்படுகின்றன. இதனால் கருவிகள் செயல்பட்டாலும், நவீன பயன்பாடுகள் அதில் கொண்டு வர இயலாது.
இவ்வாறு திட்டமிட்டு கருவிகளை பழுது அல்லது வழக்கம் ஒழிய செய்வதால் இயல்பாக மின்னணு குப்பை கழிவு அதிகரிக்க வழிகள் உருவாக்கிவிட்டது. புதிய பொருட்கள் வணிகம் விரைவாக ஆகி , உற்பத்தி மிக அதிகரிப்பு தவிர்க்க இயலாமை ஆகிவிட்டது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மென்பொருள் பொறியாளர் மற்றும் இளைஞர்கள் புதிய கணினி, செல்போன் போன்றவற்றை (வீட்டில் இருந்து பணிகள் செய்தபோது)மீண்டும், மீண்டும் வாங்கும் நிலை ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் இந்திய மின்னணு பொருள் வன்பொருள் உற்பத்தி உலக அளவில் 3% ஆக இருந்த நிலை பொருளாதாரம் உயர்ந்த பொழுதும், மின்னணு கழிவு அதிகம் ஆகிவிடும் நிலை ஒரு சுற்று சூழல் சவால் ஆக உள்ளது.
2019 ஆண்டு தேசிய மின்னணு கொள்கைப்படி உலக அளவில் மின்னணு பொருள் வடிவமைப்பு, உற்பத்தியில் ஒரு சிறப்பு நிலை அடைய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் இந்த வணிகம் ரூபாய் 1,90,366₹ கோடி ஆக இருந்த நிலை உயர்ந்து 2019-20 ஆம் ஆண்டு ரூபாய் 5,33,550₹ கோடியாக ஆகியது உண்மை. இந்த 23% ஆண்டு உயர்வு என்பது வணிக வளர்ச்சி தான்!
பல்வேறு இந்திய அரசின் மின்னணு திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி பெருக, நிறைய ஊக்க தொகை, மானியம் நிதியுதவிகள் கொண்டு அமைந்துள்ளன.2019-20 ஆம் ஆண்டில் 4-6%உற்பத்தி ஊக்கத்தொகை பல நிறுவனங்கள் பெற்றன. மின்னணு பகுதி பொருட்கள், செமி காண்டக்டர்கள், மொபைல் போன், போன்றவை உற்பத்தியில், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு பொருட்களுக்கு 25% நிதி மானியம் அளிக்கப்பட்டது.
மத்திய மின்னணு, தகவல் தொடர்பு அமைச்சகம் குறிப்பாக ஏழு வகை நுகர்வோர் மின்னணு உற்பத்தி பொருட்கள், தொழில் மின்னணு கருவி, கணினிவன்பொருள், செல்போன் ராணுவ மின்னணு கருவி, ஒளி உமிழ் டையோடு உற்பத்தி ஊக்குவித்தது.
ஆனால் முரண்பாடாக மின்னணு கழிவுகளை இரண்டு பெரும் வகையில் மட்டும் பிரித்து வைத்துள்ளது. 21 மின்சார, மின்னணு கருவிகள்மட்டும் 2016 ஆம் ஆண்டு மின்னணு கழிவு சட்டத்தின் படியும் (முதல் அட்டவணை)அமைத்து பட்டியல் உள்ளது. இதில் தகவல் தொழில் நுட்ப கருவி மற்றும் நுகர்வோர் மின்னணு வீட்டு உபயோக பொருட்கள் அடங்கியுள்ளது. பகுதி பொருட்கள் கழிவு இல்லை என்பது வருத்தமே.
மின்னணு கழிவுகளின் மிகப்பெரிய பிரச்சனை செல்போன்கள் தான்!ஏனென்றால் நம் இந்திய நாடு மட்டும் செல்போன் உற்பத்தி அதிகம் செய்யும் நாடு ஆகும்.2014-15ஆம் ஆண்டு 60 மில்லியன் கருவிகள் ஆக இருந்து வந்த நிலை உற்பத்தி உயர்வு பெற்று 2019-20 ஆம் ஆண்டு 330 மில்லியன் ஆக, நம் நாட்டு தேவையினை விட அதிகம் ஆகியது. உபயோகிப்பாளர் எண்ணிக்கை அபரிமிதம் ஆகி விட்டது.
மொபைல் போன்கள் அனைத்தும் மிக குறுகிய வாழ்நாள் கொண்டவை ஆகும். இதனால் வெகு விரைவில் அவை குப்பைகளாய் மாறி விட்டு, நவீன புதிய தொழில் நுட்பம் கொண்டு விளங்கும் போன்கள் விற்பனை அதிகம் ஏற்பட்டது.குறிப்பாக செல்போன் வாழ்நாள் தோராயமாக 5 மடங்கு குறைவு ஆகியதாக,தெரிகிறது. குறுகிய வாழ்நாட்கள் கொண்ட மின்னணு பொருட்கள் உற்பத்தியால் ஏற்படும் சூழல் “கரிம காலடி தடம் “(CARBON FOOT PRINT), அவற்றை உபயோகிப்பதால் ஏற்படுவதை விட அதிகம் (85-95%) என்று 2018ஆம் ஆண்டு ஹாமில்டன் நகரில் உள்ள, மாக் மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கருவிகள் அடிக்கடி மாற்றும் நடத்தையினால், சூழல் மாசு அதிகரிக்கும்.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் GREEN PEACE என்ற அமைப்பு, இத்தகைய திட்டமிட்டு, வழக்கழிதல், பொருள் கழிவு ஆக்குதல் பல நாடுகளில், சந்தை அபரிமிதஉற்பத்தி உச்ச நிலை அடைந்துள்ளதாகக் கூறுகிறது. அடிக்கடி வடிவமைப்பு மாற்றம், சீர் செய்தல் போன்றவற்றால் மீண்டும் புதிதாக பொருள் வாங்கும் நிலை, கழிவு அதிகம் ஆக காரணம் ஆகிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில், சீர் செய்வது என்ற நிலை சிரமம் இல்லை. ஆனால் இந்த பாரம்பரிய பண்பு மாறிவிடும் நிலை உள்ளது. இளைய தலைமுறை வாழ்க்கை முறை மன மாற்றம், அதிக தனி நபர் வருமானம், பொருட்கள் மாறும் நவீன வடிவமைப்பு, ஆகியவை மட்டும் அல்லாமல் வாழ்நாள் குறைவு போன்றவை பழைய பொருட்கள் கழிவாகி சுற்று சூழல் மாசாக ஆக விடுகிறது.
பல ஐரோப்பியா நாடுகளில் கட்டாய பொருள் சீர் செய்யும் உரிமை என்ற நிலை 2021 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் கட்டாயமாக உற்பத்தியாளர்கள் பொருட்கள் சீர் செய்யும் தகவல் பொருட்களில் அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்வீடன் பொருள் சீர் செய்யும் வரிகளை 50%குறைத்து சட்டம் உருவாக்கியுள்ளது.
மின்னணு கழிவுகள் பிரச்சனை சவால் ஆக உள்ள நிலையில் நம் நாட்டிலும், தீர்வு கண்டறிதல் அவசியம் ஆகும். விழிப்புணர்வு, அரசு கொள்கை மாற்றம், தொழிற்சாலை உற்பத்தி கட்டுப்பாடு, பொருள் நீண்ட வாழ் நாள் உறுதி, புதிய பொருள் வாங்காமல் பயன்படுத்தி வருவோருக்கு ஊக்க தொகை, ஆகியவை பரிசீலிக்கப்பட வேண்டும். மின்னணு கழிவுகள் நம் மண்ணுக்கு மாசு, மனித குல தீங்கு என்பது உணர்வு பூர்வமாக அறிவோமா?!!
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 4 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 4 – முனைவர். பா. ராம் மனோகர்



குறையா சுற்றுசூழல் குற்றங்கள்!
வருமா நமக்கு மன மாற்றங்கள்?!
முனைவர். பா. ராம் மனோகர்.

“தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு வீடு இவையுண்டு தானுண்டென்போன், சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் “என புரட்சி கவிஞர் பாரதி தாசன் 70 ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தின் சுயநலம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அது நவீன காலம், உலக மயமாக்கல் போன்றவற்றால் தீவிரமயம் ஆகியது நிதர்சன உண்மை! வளர்ச்சி என்ற பெயரில் தன்னை பற்றிய சிந்தனை மேலோங்கி, அனைத்து துறைகளிலும் சமுதாய நலன் பின்னோக்கி நிற்கின்றது!

சுற்று சூழல் மாசு பாடு என்பது தன் வீடு, இடம் மட்டும் இருக்க கூடாது! மற்ற இடங்களில் இருப்பது ஏற்றுக் கொள்வதும், அதற்கு அரசுத் துறையினை குறைகள் கூறுவதும் நம் வழக்கம் ஆகிவிட்டது. சுற்றுசூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பசுமையாக்கம், தூய்மை, மாசகற்றுத்ல்

ஆகியவன, கல்வியறிவு, விழிப்புணர்வு அறிவியல் தொழில் நுட்பம் போன்றவற்றை பலரும் அறிந்த நிலையிலும் பின்பற்றுவதும், சரியாக செயல் படுத்தி வருவதிலும் நாம், நம் நாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதை நாம் உணர்வோமா!?

ஆம்! சமீப காலத்தில் நம் நாட்டில் சுற்றுசூழல் குற்றங்கள் பெருகிவிட்டது.

குறிப்பாக 2019-20 ஆண்டுகளில் 78% அதிகம் இக்குற்றங்கள் நடைபெற்றுள்ள நிலை கவலை தரக்கூடியது அல்லவா!? வனங்கள் அழித்தல், வனவிலங்கு வேட்டை, சூழல் பாதிப்பு செய்தல், நீர், காற்று மாசாக்குதல், புகை பிடித்தல், ஒலி மாசு தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்திற்கு எதிர் குற்றம், போன்றவை, அவற்றின் நீதி மன்ற வழக்குகள் எண்ணிக்கை பெருகிவிட்டன. நம் நாட்டில் 2020 ஆம் ஆண்டில் 61767 வழக்குகளும்,2021 ஆம் ஆண்டில் 64,471 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன. ஆனால் 2019 ஆம் ஆண்டு 34676 வழக்குகளே இருந்த நிலை!

இதனை விசாரணை செய்து, முடித்து வைக்க கால அவகாசம் எவ்வளவு என்று கணக்கு பார்த்தால், தற்போதைய நிலையில் நீர், காற்று மாசு தொடர்பு குற்ற வழக்குகள் அனைத்தும் முடிய 33 ஆண்டுகள் ஆகும் எனவும், சுற்றுசூழல் பாதுகாப்பு வழக்குகள் நிறைவடைய 54 ஆண்டுகள் ஆகும் என ஆய்வு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

வன விலங்கு குற்றங்கள், சூழல் குற்றங்கள் ஆகியவை உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அதிகம் நடைபெறுகின்றன. நீர், காற்று மாசு போன்றவை மத்திய பிரதேசம் மேல் சொன்ன மாநிலங்களுடன் சேர்ந்து கொள்கிறது. புகைபிடித்தல் அதிக குற்றத்தில் தமிழ் நாடு, கேரளா மாநிலங்கள், ராஜஸ்தான் உடன் இணைகின்றன. ஒலி மாசு குற்றம் ராஜஸ்தான் மாநிலம் 7186 வழக்குகள் கொண்டு முன்னணி வகித்துள்ளது. மத்திய பிரதேசம், தமிழ் நாடு போன்றவை அதற்கு அடுத்தநிலையில் உள்ளன.ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அந்தமான், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன், டையூ, லடாக் போன்ற மாநிலங்களில் எவ்வித சுற்றுசூழல் குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை, என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு 13316 வழக்குகள் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 42756 சூழல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே காலத்தில் கர்நாடக மாநிலத்தில் 413, கேரளா வில் 1795 மட்டும் பதிவு செய்துள்ள நிலை நம் சிந்தனை தூண்டும் ஒன்று!

சுற்றுசூழல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் இந்திய வன சட்டம் (1927)

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972)

சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் (1986)

உயிரின பல்வகைமை சட்டம் (2002)

நீர் மாசு எதிர்ப்பு, பாதுகாப்பு சட்டம் (1974), காற்று மாசு எதிர்ப்பு சட்டம் (1981)

போன்றவை நம் அரசு உருவாக்கிய சட்டங்கள், எனினும் இது பற்றிய விழிப்புணர்வு, செயல்படுத்தும் நிலையில் தெளிவு, ஒளிவு மறைவற்ற நம்பகத் தன்மை, வெவ்வேறு அரசு துறைகளிலும் ஒருங்கிணைப்பு, போன்றவை இன்றைய நிலையில் சவால்கள் ஆகும். பொருளாதாரம், வணிகம், நவீன அறிவியல் தொழில் நுட்பம் மாற்றங்கள் ஆகியவற்றால் இவற்றிற்கிடையே முரண்பாடுகள் நிலவுகிறது.

சுற்றுசூழல் சட்டங்கள் விழிப்புணர்வு, பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில், முறையாக ஆய்வு செய்து இணைக்கப்படவேண்டிய அவசியம் ஆகும். பொது மக்களுக்கும் உரிய தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டிய கடமை அரசு துறைகளுக்கு உள்ளது! சிந்தித்து பார்ப்போம்!!

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 3 – முனைவர். பா. ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 3 – முனைவர். பா. ராம் மனோகர்



சூரிய  ஆற்றல், சுலபமாய் கிடைக்குமா, நம் மக்களுக்கு!?
முனைவர். பா. ராம் மனோகர்.

சுற்றுசூழல் பிரச்சினைகளில், மிகவும் முக்கியமானது,”ஆற்றல் தேவை” ஆகும். உலக மயமாக்கல், நவீன இந்தியாவில், வணிகம், வாகனங்கள் பெருக்கம், மக்களின் வாழ்க்கை மாற்றத்தினால், மின்சாரம், எரிபொருள் ஆகியவை, அதிகம் பயன்பாடு, ஏற்பட்டுள்ளது எனில் மிகையில்லை! மேலும் படிவ எரி பொருட்கள், பெட்ரோலியம், நிலக்கரி குறைந்து வரும் நிலை ஒரு புறம், இருப்பினும் 1.4பில்லியன் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆற்றல் குறைபாடு, சமீபகாலமாக தவிர்க்க இயலாத ஒன்று.

மாற்று புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான காற்று, கடலலை, சூரிய ஆற்றல் போன்றவற்றின் தொழில் நுட்பம் அறிந்து அவற்றை செயல்பட பல திட்டங்கள் தீட்டுதலும்

அவசியம் ஆகி, இந்தியாவில் மத்திய அரசு அவற்றை துவக்கம் செய்துள்ளது என்பது உண்மை! எனினும் அவற்றை சரியாக செயல்பட செய்ய பல சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

சூரிய ஆற்றல் கருவிகளின் அடிப்படை பொருட்களான polysilicon பாலிசிலிகான், ingots இங்கோட்ஸ், wafers வெபர்ஸ் போன்றவற்றை நம் நாட்டில் உற்பத்தி செய்ய இயலவில்லை.

Solar photovoltaic (சூரிய ஒளி ஈர்ப்பு கருவி ), நவீன தொழில் நுட்பம், பொருளாதார அளவீடு, உயர் நிலம், மின்சார கட்டணம், குறை திறன் பயன்பாடு, உயர் நிதி கட்டணம், திறன் குறைவான தொழிலாளர் போன்றவை ஒருங்கிணைந்த நிலையில் இல்லாதது, உற்பத்தி விலை அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது.

சூரிய ஆற்றல் தேவை குறிக்கோளினை, சரியாக அடைய நிலையற்ற கொள்கையும், ஒரு தடை ஆகும்.

வழக்கமான ஆற்றல் கருவி உற்பத்தி நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வணிகம் குறையும் என்ற அச்சத்தில் புது மாற்று ஆற்றல் முறைகளை தவிர்த்து வருகின்றன. மாநிலங்களுக்கு இடையில் சூரிய ஆற்றல் சட்ட விதிகள் மாறுவது, வாங்கும் திறன் மாற்றம் போன்றவை நுகர்வோருக்கு தடையாகிவிடுகிறது.

இந்த சூரிய ஆற்றல் கோட்பாடு, கொள்கை குழப்பம் செயல்பாடு மேற்கொள்ள, தாமதம் ஆகும் நிலை உள்ளது.

இதே போல் பெட்ரோலிய வாகனங்களுக்கு அதிக நிதி, கடன் வழங்கும் நிலை உள்ளது. சூரிய ஆற்றல் திட்டங்கள், கடன் நிதி பெற்று செயல் படும் நிலை கடினம்.

ஒரு புறம் அரசு புதுப்பிக்கும் எரி சக்தி விழிப்புணர்வு மேற்கொள்கிறது. ஆனால் நிலக்கரி உற்பத்தி,, சுரங்க தொழில் ஆகியவற்றிற்கு மானியம் கிடைக்கிறது.2018 ஆம் ஆண்டு துவக்க நிலை வணிக ஆற்றல் நுகர்தலில் 56%நிலக்கரி, 30%எண்ணெய், 6%வாயு, 3%புதுப்பிக்கும் ஆற்றல், 4%நீர் ஆற்றல், 1%அணு ஆற்றல் ஆகிய நிலையில் இருந்தது.

வழியில் முன்னுரிமை, சூரிய ஆற்றல் கருவிகள் உற்பத்தி, வணிகம் ஆகியவற்றுக்கு தர வேண்டும்.

வெப்பமண்டல பருவகால நாட்டில் எளிதில் பெறக்கூடிய ஆற்றல் என்பது சூரிய ஆற்றல் மட்டுமே! இது அனைத்து தரப்பு மக்கள் எளிதில் பெற கட்டணங்கள் குறைப்பு, பெரு விழா அரங்கம், தொழிற்சாலை ஆகியவற்றில் கட்டாய கருவி அமைப்பு போன்ற நிலை வர சட்டம் கொண்டு வரலாம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூரியன் ஆற்றல் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் முழுமையாக அறிய வேண்டும். சுற்றுசூழல் பாதிக்காத, காற்று மாசு ஏற்படுத்தாத இந்த ஆற்றல் நாம் அனைவரும், எதிர் காலத்தில் எளிதில், விரைவில் பெறுவோம் என்ற நம்பிக்கை கொள்வோம்.