1.
வைக்கோல் கன்று குட்டி,
துள்ளி ஓடுகிறது,
பால்காரனின் பின்னாடி.
2.
மலை உச்சி,
முழு நிலவுடன் முத்தமிடுகிறது,
மேலேறி வரும் பாதை.
3.
கரையோரத்து தூண்டில்காரன்,
புழுவை விட்டு பார்க்கிறான்
கடல்,ஆறு, குளம்.
4.
வாரக் கடன் முடிந்தது
சந்தனம், தேங்காய்,பூமாலை
கோவில் கிணற்றில்.
5.
ஆடி மாத காற்று,
அழகான காற்றாடி பறக்கிறது,
என் ஓலை குடிசை.
எழுதியவர்
அகவலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.