Subscribe

Thamizhbooks ad

தென்றல் கவிதைகள்

1
செடியின் முன்னுரிமை
பூக்களெனில்
வெட்டுக்கொடுக்கும்
தண்டுக்கு முதலுரிமை
சூரிய ஒளியில்
முகம் கழுவி
நிமிர்ந்தால்
கூந்தல் இரவில்
தலைகீழாய்த் தொங்கும் முடிவு
யாருக்காவது எப்போதாவது முன்னுரிமை
எப்போதாவது யாருக்கோ முதலுரிமை
யாரின் யாருக்கோ
கிடைக்கும்
எப்போதாவதில்
என்ன உரிமை இருக்கிறது
யாதுமாகி
—–
2
உந்தி இட்ட
நெற்றி முத்தத்தில்
தீவுப்பொட்டு மட்டும்
ஒட்டிக் கொண்டது
கடலான பூவின்
திசையாகும் நீ
—-
3
அன்பொரு தலைகீழாய்த்
தொங்கும் கூட்டுப்புழு
கல்லெறிந்தால் சிதையும்
காற்றில் புதையவிட்டால்
பட்டாம்பூச்சியின்
வானத்தை பத்திரமாகப்
பெத்துக் கொடுக்கும்.
4
மே மாச சனிக்கிழமையொன்றில்
தவிடு வாங்கிவிட்டுத்
திரும்பும்போது அமலா அக்காவைப் பார்த்தேன்
ரேசன் அரிசி வடிவில்
அமலா அக்காவின் உயிர்
தராசிலிருந்து சாக்குக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது
இடது புறங்கையைக் கிள்ளி
சொல்லாலும் வலிக்காத அளவுக்கு
கடைசிவரைக்கும் பேசாமயே இருந்துட்ட
என்றது
டீச்சராகிட்டீங்களா அக்கா என்றதும்
வீட்ல கஷ்டம்.
கம்பெனிக்குப் போறேன்.
வேற வழியில்ல.
ஏத்தமான ரோட்டின் ஓரத்தில்தான் சைக்கிளை நிறுத்தியிருக்கிறேன்.
டீச்சராக முடியாத அமலா அக்காவின்
அன்றைய இரவில் வாசமடித்த ரேசன்
சோத்தை விக்கி விக்கி அழுது
திங்க முடியாமல் தின்றேன்.
இன்று நல்ல அரிசிச் சோறு
அமலா அக்காவுக்கும் சேர்த்து
அமலா அக்கா
எனக்கும் சேர்த்து ஆக்கியிருக்கும்.
இருந்தாலும்
அடுத்த கவிதைத் தொகுப்பு
அமலா அக்கா (எ) அமலா டீச்சருக்கு
சமர்ப்பணம்
தென்றல்

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும், சிறிய கதைகள் மூலம் பெரிய செய்திகளை கொண்டு சேர்க்கிறது இந்த புத்தகம்.ஒவ்வொரு கதைகளோடு தொடர்புடைய அழகு ஓவியங்களும் இடம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளிட்டிருக்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தேசம் பற்றிய விழிப்புணர்வு தருவிக்கும் படைப்பாக இது மலர்ந்திருக்கிறது....

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய கழிவறை இருக்கை நூல். அப்போது கண்ணில் பட்டு வாங்கியது தான் சாண்ட்விச் நூல். ஆனால் வாசிக்காமல் கிடப்பில் போட்டு தற்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here