வெ.நரேஷின் கவிதை ve Naresh poem

அதிகாலையில் பதற்றத்துடன் எழுந்து
விரைந்து செல்கிறார்
கறிக்கடையை நோக்கி அப்பா தீர்ந்துவிடுமோ என்று

எடை போட்டவனைத் திட்டியவாறே
அருவாமனையில் அரிந்தாள்
மாட்டுக்கரியை அம்மா

மண் அடுப்பில்
அம்மா சமைக்கும் மாட்டுக்கறிக் குழம்பின்
வாசம்
பக்கத்து வீடுகளின் மூக்கைத் துளைக்கும்

பல்லுக்கு இதமாகக் கடித்து இழுத்தாலும்
விடாப்பிடியாகக் கறியுடன் சண்டைபோடும் கிழட்டுத் தாத்தா

அன்று எல்லாம் உறவினர்களும் வந்தார்கள்
காக்கைகளின் சாயலில் வீட்டிற்கு

மகன் கறி வேண்டும் என்று அடம்பிடிக்க
குழம்பில் கரைந்துவிட்டது என்று சமாளிக்கும் அம்மா

வாரத்தில் ஒரு நாளுக்காக ஏங்கிக்
காத்துகொண்டிருக்கும் அந்நாளே
வாழ்வின் பொன்னாள்

 

                    எழுதியவர் 

                    வெ.நரேஷ்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *