அதிகாலையில் பதற்றத்துடன் எழுந்து
விரைந்து செல்கிறார்
கறிக்கடையை நோக்கி அப்பா தீர்ந்துவிடுமோ என்று
எடை போட்டவனைத் திட்டியவாறே
அருவாமனையில் அரிந்தாள்
மாட்டுக்கரியை அம்மா
மண் அடுப்பில்
அம்மா சமைக்கும் மாட்டுக்கறிக் குழம்பின்
வாசம்
பக்கத்து வீடுகளின் மூக்கைத் துளைக்கும்
பல்லுக்கு இதமாகக் கடித்து இழுத்தாலும்
விடாப்பிடியாகக் கறியுடன் சண்டைபோடும் கிழட்டுத் தாத்தா
அன்று எல்லாம் உறவினர்களும் வந்தார்கள்
காக்கைகளின் சாயலில் வீட்டிற்கு
மகன் கறி வேண்டும் என்று அடம்பிடிக்க
குழம்பில் கரைந்துவிட்டது என்று சமாளிக்கும் அம்மா
வாரத்தில் ஒரு நாளுக்காக ஏங்கிக்
காத்துகொண்டிருக்கும் அந்நாளே
வாழ்வின் பொன்னாள்
எழுதியவர்
வெ.நரேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.