Subscribe

Thamizhbooks ad

தங்கேஸ் கவிதைகள்

 

 

 

1.கிராமியப் பாடல்

பொருள் : தனிமை

பல்லவி

ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது
கிணத்துக்குள்ள நெலவு கிடந்து
நீச்சடிக்குது

குளம் குட்டை எல்லாமே
குறட்டை விடுகுது
கொஞ்ச நேரம் ராத்திரியும்
கண்ணசருது

ஆனாலும் ஆனாலும்
நான் உறங்கவில்லை
மானே என் மானே
உன் மனசு இரங்கவில்லை

( ஆத்து தண்ணிய )

சரணம் 1

நெத்தி சுடும் போது
கை வச்சுப் பார்ப்ப

நிமிசத்துக்கு நூறு தரம்
வேர்க்குதான்னு கேப்ப

இப்ப உசிரு சுடும் போது -.
காணலியே உன்னை

ஒரு பொட்டுத் தூக்கமில்லை
மூடலியே கண்ணை

பச்சரிசி இங்க
ஊற வச்சுக் கிடக்கு

அடுப்பு மேல வெறும் உலைதான்
கொதிச்சிகிட்டே இருக்கு

( ஆத்து தண்ணிய )

சரணம் 2

புத்தி கெட்ட மனசு
சுத்தி சுத்தி வருமே

லச்சை கெட்ட ஆட்டுக்குட்டி
கத்தி கத்தி விழுமே

இப்ப நட்ட நடு ராத்திரி
பால்போல அடிக்குது

கெட்ட கெட்ட சொப்பனம்தான்
தேள் போல கடிக்குது

என் மூச்சுக்காத்தில் நீயும்
காதவச்சு கேளு.

அது உன் பேரைச்
சொல்லலைன்னா
நான் உசிரில்லாத ஆளு

( ஆத்து தண்ணிய )

 

2.என் இனிய கடவுளே
நீ குழைத்து விளையாடும்
களிமண் பொம்மையிலிருந்து
ஒரு தீற்றலை எனக்கும் பூசிவிடு
பச்சை களி மண்ணின் கர்ப்பவாசம்
எனக்குள் ஆழமாக இறங்குகிறதா
என்று பார்க்கலாம்
என் மீது வளர்ந்து கொண்டிருக்கும்
பாறையியின் செதில்கள்
கொஞ்சம் உடைகிறதா
 என்று  பார்க்கலாம்
என்னால் வறண்டு போன நதி
கொஞ்சம் துளிர்விடுகிறதா
என்று பார்க்கலாம்
பட்டுப் போன சருகுகள்
என்னிடம் ஒருமுறை
 கடைசி முத்தம்
கேட்கிறதா என்று பார்க்கலாம்
சோறெடுக்க வந்த காக்கை
தோள்களின் ஓரம்
உரசி செல்கின்றதா என்று
பார்க்கலாம்
இவைகள் எதுவுமே நிகழவில்லையென்றால்
வா இருவரும் சேர்ந்து
புதியதொரு கடவுளை படைக்கலாம்
தங்கேஸ்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here